மாணவ மாணவியரை வரவேற்க தயாராகும் மாநகராட்சி பள்ளிகள்
கோவை: மாநகராட்சி சார்பில் 148 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தேவையான கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.கல்விக்கென சிறப்பு நிதி ஒதுக்கி, மாணவர்களின் தனித்திறமை வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒரு வாரமே இருப்பதால், பள்ளி வளாகங்களை தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பள்ளிகளை நேற்று காலை ஆய்வு செய்தார். தூசி படிந்திருக்கும் வகுப்பறைகளை சுத்தம் செய்து, தண்ணீரால் கழுவ வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் குப்பை தேங்கியிருக்கக் கூடாது. மரக்கிளைகள், காய்ந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறையை பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.