உள்ளூர் செய்திகள்

செயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் செயின்ட் பால் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் நேகாபாட்டியா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் மரியவிசானா வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களான என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் ஜஸ்பர்ரோஸ், டாக்டர் லெனின், ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர் தேசிங்குசிவராமன், எக்ஸ்னோரா தலைவர் பசுபதி, வக்கீல் சுஜாதா ஆகியோர் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பிற தேர்வுகளில் வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.தமிழாசிரியர் ரேவதிக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்