நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 77 பேர் தேர்ச்சி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 77 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிகளில், நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது. நீட் தேர்வு எழுத விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 502 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு முடிவில், அரசு பள்ளி மாணவர்கள் 9 பேர், 68 மாணவிகள் என மொத்தம் 77 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.