உள்ளூர் செய்திகள்

மீன்வள மேம்பாட்டு திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

​திருவள்ளூர்: மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உள்நாட்டு மற்றும் கடல்வளம் மீன்வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடு தொழில் முனைவோர்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.இதில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மீன் வளர்ப்பிற்கான தொட்டிகள், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்திற்கு மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மானியத்தோடு வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை, பொன்னேரி அலுவலகம், வேண்பாக்கம் முகவரியிலும் 044-27972457 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்