உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., வந்திதாபாண்டே உத்தரவின்படி, கறம்பக்குடி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, மாங்கான்கொல்லைப்பட்டியைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் பரமசிவம், 19, சூரக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கறம்பக்குடியில் கடந்த வாரம் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த, 15 வயது சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்