ஒவ்வொரு செமஸ்டரிலும் புராஜெக்ட் முக்கியம்
திருப்பூர்: புராஜெக்ட்டின் முக்கியத்துவம் பற்றி சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் பேசினார்.அவர் பேசியதாவது:பாடப்புத்தகத்தில் இருந்து மட்டும் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியாது. செய்முறை, ஒவ்வொரு செமஸ்டரிலும் புராஜெக்ட் முக்கியம். இன்ஜினியரிங் பயிற்சியுடனான படிப்பு. புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன; அதற்கேற்ப தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.பெரும் மாற்றத்தை ஏ.ஐ., ஏற்படுத்தி வருகிறது. உங்களை பற்றிய தகவல்களை கொண்ட ரெஸ்யூம் பேச வேண்டும். படிக்கும் போதே கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஆனால், அத்துறையில் சிறந்தவர்களாக நீங்கள் மாற வேண்டும்; அப்போது தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். கூடுதல் தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடுதல் சான்றிதழ் படிப்புகளை படிப்பது உங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்யும்.