உள்ளூர் செய்திகள்

சாகர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

திருப்பூர்: பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், 2026ம் ஆண்டு சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடந்தது. தாளாளர் சவுந்திரராசன் தலைமை வகித்தார். சாகர் அறக்கட்டளை பொருளாளர் பழனிசாமி, துணைத் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஷீஜா வரவேற்றார்.பள்ளிக் கல்வி இயக்குனர் ஐசக் பிரபு குமார் பேசினார். தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, முதன்மை இடம் பெற்ற 38 மாணவர்களுக்குத் தலா ஒரு குறிப்பிட்ட தொகையாக மொத்தம் 12.5 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வெற்றியின் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களும் மாணவர்களை வாழ்த்தி அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்