செங்கையில் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கை தொடங்கி, நடந்து வருகிறது.இது குறித்து, கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு, மாணவர் சேர்க்கை கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர், www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 94990 55673; 99629 86696 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.