பள்ளி மாணவர்களுடன் சேவை உறுதிமொழி ஏற்பு
காங்கேயம்: துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக காங்கேயம் நகராட்சியில், துாய்மையே சேவை விழிப்புணர்பு நிகழ்ச்சி காங்கேயம் நகராட்சி பள்ளியில் நடந்தது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை முறையாக தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்பள்ளி மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளி வீடு மற்றும் பொது இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.