உள்ளூர் செய்திகள்

பாராமெடிக்கல் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு

அடுத்த கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான ஜுலை 19ம் தேதி துவங்கியது. முதலில் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பின. அதையடுத்து தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஜுலை 25ம் தேதியுடன் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்