உள்ளூர் செய்திகள்

வகுப்பறைக்குள் மழை நீரால் மறியல்

உசிலம்பட்டி: வகுப்பறைக்குள் மழைநீர் வந்ததால் மறியல் செய்த பெற்றோரை, எம்.எல்.ஏ., அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் செய்தனர்.உசிலம்பட்டி அருகே ரெங்கசாமிபட்டியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டுக் கட்டடத்தில் வகுப்பறைகள் நடக்கின்றன. ஓடுகள் சேதமடைந்துள்ளதால், இரு தினங்களாக பெய்த மழை காரணமாக வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கியது.இதனை சீரமைக்காமல் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் உள்பட பலர் பள்ளிக்குச் சென்று விரைவில் வகுப்பறைகள் சரிசெய்யப்படும், என்று சமாதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்