புகார் தெரிவிக்க மாணவர்களுக்கு அழைப்பு
திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு குறித்து தங்களது கருத்து, புகார்கள் இருப்பின் தேர்வுத் துறைக்கு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11ம் தேதி துவங்கியது. வரும், 16ல் ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. ஏப்., 6ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் நடக்கும் பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் புகார் அல்லது கருத்துக்கள் கூற விரும்பினால், காலை 08:00 முதல் இரவு 08:00 மணி வரை தேர்வு நாட்களில், 94983 - 83075; 94983 - 83076 என்ற மொபைல் போன் எண்ணில், கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த கருத்து, சந்தேகங்களையும் மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் dsequestionpaperqueries@gmail.com என்ற இ-மெயில் வாயிலாகவும் தெரிவிக்கலாம், என, மாவட்ட தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.