உள்ளூர் செய்திகள்

கணித திறனறித்தேர்வில் வென்ற மாணவர்கள்

கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் நடத்திய கணித திறனறித் தேர்வில், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர்.எட்டாம் வகுப்பைச் சேர்ந்த சிஜா விசாலி, ஏழாம் வகுப்பைச் சேர்ந்த தாரனேஸ்வரன், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த சமித்தா மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கனிஷ்கமா, ஏவலினா கிறிஸ்டி ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளனர். மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் ஆனந்தகுமார், ஆசிரியர்கள் நிர்மலா, பிந்து ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்