உள்ளூர் செய்திகள்

டி.சி.எஸ். நிறுவனத்தின் புதிய சலுகை!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வுகள் முதல், இளநிலை பொறியியல் படிப்பு வரை, 75% மதிப்பெண் வைத்திருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை, பணிக்கு தேர்வு செய்யும்போது, அவர்களுக்கான எழுத்து தேர்வை டி.சி.எஸ். நிறுவனம் ரத்துசெய்துள்ளது. இதனால் அவர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள். "இதன்மூலம் இந்த தகுதியுள்ள அண்ணா பல்கலையின் 1400 மாணவர்கள், எழுத்து தேர்வு இல்லாமல் நேரடியாக டி.சி.எஸ். நிறுவனத்தின் நேர்முகத்தேர்வில் பங்கேற்பார்கள்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார். டி.சி.எஸ். நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, விப்ரோ, ஐ.பி.எம். காக்னிசன்ட், அக்சன்ஜர் போன்ற பிற முன்னணி நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் "இந்த நடவடிக்கையின் மூலம், கிராமப்புறங்களை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பயனடைவார்கள்" என்று அண்ணா பல்கலை பேராசிரியர் சேகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்