உள்ளூர் செய்திகள்

கைவினை பொருட்கள் விற்பனைக்காக ரூ.40 கோடியில் சென்னை அங்காடி

சென்னை: சென்னையில் கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்த, 40 கோடி ரூபாயில், 5 ஏக்கரில், சென்னை அங்காடி அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், சட்டசபையில் அவர் வெளியிட்ட 46 அறிவிப்புகள்:*சென்னையில் உள்ள 10 பொது நுாலகங்கள், 20 கோடி ரூபாயில், மின் வழி கற்றல் வசதி கொண்ட மையங்களாக மாற்றப்படும்*கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க, கைவண்ணம் சதுக்கம் எனப்படும், சென்னை அங்காடி, 40 கோடி ரூபாயில், 5 ஏக்கரில் அமைக்கப்படும்*மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை, மெரினா பாரம்பரிய வழித்தடம், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்*அண்ணா சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைக்கு, உள்ளூர் பகுதி திட்டம் தயாரிக்கப்படும்*சென்னைப் பெருநகர பகுதிக்கு வெள்ள கட்டுப்பாடு வரைபடம்; நகர்ப்புற வடிவமைப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்*கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம், 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்; 15 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும்; 7 கோடி ரூபாயில், குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்*சென்னையில் மூன்று பன்னோக்கு மையங்கள், 30 கோடியில் அமைக்கப்படும். சேத்துப்பட்டு பசுமை பூங்கா, 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்*10 சுரங்கப்பாதைகள் 8 கோடி ரூபாயிலும்; முக்கிய போக்குவரத்து சிக்னல்கள், சூரிய சக்தியில் இயங்கும் வகையில், 5 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்*திரு.வி.க., நகர் கொன்னுார் நெடுஞ்சாலையில், 10 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம்; ஆர்.கே.நகர் இளையா தெருவில், 8 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் அமைக்கப்படும்*சென்னை, வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் அமைந்துள்ள, சிறுவர் விளையாட்டுத் திடல், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். பெரம்பூர் சென்ட்ரல் அவின்யூ சாலையில், 8 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும்*கொண்டித்தோப்பு வால்டாக்ஸ் சாலையில், 20 கோடி ரூபாயில் சமுதாயக்கூடம் மற்றும் விளையாட்டுத்திடல்; சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில், 2 கோடி ரூபாயில் கால்பந்து மைதானம்; ராயபுரம் மூலகொத்தளத்தில், 10 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்*சேப்பாக்கத்தில் 10 கோடி ரூபாயில் ரத்த சுத்திகரிப்பு மையம்; மயிலாப்பூர் லஸ் நிழற்சாலையில், 3 கோடி ரூபாயில் பண்பாட்டு அரங்கம் அமைக்கப்படும்*சைதாப்பேட்டை அம்மா பூங்கா 2.50 கோடி ரூபாயிலும்; தி.நகர் பஸ் நிலையம், 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்*கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்கா, 3 கோடி ரூபாயிலும்; அய்யப்பன்தாங்கல், திருவான்மியூர் பஸ் நிலையம், தலா 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்*நெமிலிச்சேரியில் அமைந்துள்ள புத்தேரி ஏரி, 5 கோடி ரூபாயிலும்; தாம்பரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பூங்கா, நல்ல தண்ணீர் குளம், 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்*அம்பத்துார் பானு நகரில், 6 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் கூடிய, விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்*ஆவடி, பாடியநல்லுார், தங்கசாலை வள்ளலார் நகர் பஸ் நிலையம், தலா 10 கோடி ரூபாயிலும்; போரூர் ஏரி, பெருங்குடி ஏரி தலா 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு சேகர்பாபு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்