மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடந்தது.திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், துளிர் திறனாய்வு தேர்வு நடந்தது. இதில், திருத்தணி ஒன்றியத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த தேர்வை மாவட்ட துணை செயலர் அந்தோணி ஏற்பாடு செய்திருந்தார். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவில் நடக்கும் தேர்வில் பற்கேற்க அனுமதிக்கப்படுவதுடன், பரிசுகள் வழங்கப்படும்.