தொன்மை பொருள் கண்காட்சி
சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் தொன்மை பொருள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். காளீஸ்வரன் வரவேற்றார். தொல்நடை குழு நிறுவனர்காளிராசா தொன்மையான பொருள் குறித்து பேசினார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி, எஸ்.கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.ஜெயமணி கண்காட்சியை துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வித்யா கணபதி பங்கேற்றனர். நரசிம்மன் நன்றி கூறினார்.