சிற்பக்கல்லுாரி வளாகத்தில் தீ
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள இக்கல்லுாரி வளாகத்தில், புதர் அடர்ந்துள்ளது. தற்போதே கடும் வெயில் தகிக்கும் நிலையில், புதர் செடிகள் காய்ந்துள்ளன.இப்புதரில், பகல் 12:30 மணிக்கு, திடீரென தீப்பற்றி புகைந்தது. சாலையில் வாகனங்களில் சென்றவர்கள், புகையால் மூச்சுத் திணறினர்.சில ஏக்கர் புதரில் தீப்பற்றி கருகி சாம்பலானது. கல்லுாரி மாணவர்கள் போராடி தீயை அணைத்து கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து சென்ற மாமல்லபுரம் தீயணைப்பு படையினர், மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.