உள்ளூர் செய்திகள்

சுவயம் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் சுவயம் திட்டத்தில் வழங்கப்படும் 525 படிப்புகளுக்கான பருவத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்துகின்றன.தேர்வு நடைபெறும் முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இத்தேர்வுகளில் பொதுவாக கொள்குறி வகை கேள்விகள் இடம்பெறும். படிப்புகளை பொறுத்து, சில கேள்விகள் எழுத்து மற்றும் காகித வழியிலும் நடைபெறுகிறது. மொழி பாடங்களை தவிர, மற்ற அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் ஆங்கில மொழியில் கேட்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://swayam13.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31தேர்வு நாட்கள்: டிசம்பர் 7, 8, 14 மற்றும் 15தேர்வு நேரம்: 3 மணி நேரங்கள். காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் என ஒவ்வொரு நாளும் இரண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. விபரங்களுக்கு: https://exams.nta.ac.in/swayam


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்