பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சிதம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் இந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் வெற்றி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சரவணன் பொன்னாடை போர்த்தி பாராட்டி, பரிசு, சான்று கேடயங்களை வழங்கினார். பள்ளி செயலர் சந்தோஷ்ராமன் நன்றி கூறினார்.