கால்பந்து பயிற்சி முகாம்
சிவகங்கை: சிவகங்கை கால்பந்து கழகம் சார்பில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கியது. லயன்ஸ் கிளப் தலைவர் ரமேஷ் கண்ணா, முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் மகேந்திரக்குமார், உதயகுமார், முருகன், ஜாபர் முகாமை துவக்கி வைத்தனர்.பயிற்சி முகாம் மே 25 வரை நடைபெற உள்ளது. மன்னர் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட விளையாட்டு அரங்கம் இரண்டிலும் பயிற்சி நடைபெற உள்ளது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். காலை 06:30 முதல் 08:30 மணி, மாலை 05:00 முதல் 06:30 வரை பயிற்சி நடைபெறும். நிகழ்ச்சியில் கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.