முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் மற்றும் ஆர்ச்சர்ட் மண்டபங்களில் நடந்தது.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக் கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார் தலைமை வகித்தார். ஏ.ஆர்., / வி.ஆர்., கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, ஐ.ஓ.டி., மற்றும் ஸ்மார்ட் இ - மொபிலிட்டி சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டது உள்ளிட்ட கல்லூரியின் சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் முன்னாள் மாணவர்களின் தீவிர ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார்.நிகழ்வில் முன்னாள் மாணவர்களின் முன்னெடுப்புகள் குறித்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடல் நடந்தது. வெள்ளி விழா கொண்டாட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. முதல்வர் டேவிட் ரத்னராஜ், சங்க நிர்வாகிகள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.