உள்ளூர் செய்திகள்

தலைமைத்திறனை வளர்க்கும் பி.ஐ.டி.,!

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் ஆடை முதல் மருந்துகள் வரை அனைத்தும் தனிமனிதத் தேவைக்கு ஏற்ப மாறிவிட்ட போதிலும், கல்வி முறை மட்டும் இன்னும் அனைவரையும் ஒரே அளவுகோலால் அளவிடுவது சரியான அணுகுமுறை அல்ல!இந்த இடைவெளியைக் களைந்து, பழங்குடி கிராமங்கள், தமிழ் வழி பள்ளிகள், சர்வதேச பள்ளிகள் மற்றும் பிற மாநிலங்கள் என பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் மாணவர்களின் தனித்துவமான கனவுகளையும் இலக்குகளையும் நனவாக்குவதே பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கழகத்தின் அடிப்படை நோக்கம்.இங்கு மாணவர்கள் ஒரு தொகுதியின் பகுதியாக அல்லாமல் தனிநபராக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கற்றல் பாதைகள், தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், உலகத் தரத்திலான ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் 25 ஏக்கருக்கும் மேலான விளையாட்டு வசதிகள் கொண்ட முழுமையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்தொழில் துறை எதிர்பார்ப்புக்கும் கல்வி முறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை பி.ஐ.டி., தனது மையக் கொள்கையாகக் கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக, திறன் மேம்பாட்டை மாணவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைத்துள்ள இந்நிறுவனம், விடுதி மாணவர்களின் வசதிக்காக இரவு நேரத்திலும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கிடைக்க வழிவகை செய்துள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் நேரடியாகத் திட்டங்களைக் கண்காணிப்பதால், மாணவர்கள் தற்போதைய தொழில் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி பெறுகின்றனர். வேலைவாய்ப்பு என்பது ஒரே நடவடிக்கையில் உருவாவதில்லை; அது ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் சூழலால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து, இங்கு உண்மையான திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மேலும், செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் பாடம் மட்டுமல்ல, அது கல்வியின் ஒட்டுமொத்த அமைப்பிலும் ஊடுருவ வேண்டிய பரிணாம மாற்றம் என்ற நோக்கில் பி.ஐ.டி., செயல்படுகிறது. இதில் ஆழமான ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக, இந்தியாவின் சொந்த தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்கும் வகையில் உள்கட்டமைப்பும், மற்ற பொறியியல் மாணவர்களின் பாடங்களிலேயே செயற்கை நுண்ணறிவு சிந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு மாணவரும் தங்களைச் சுற்றியுள்ள இரண்டு உண்மையான சமூக அல்லது தொழில் சவால்களைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை நீண்ட காலத் திட்டங்களாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது.வேலைவாய்ப்புஒரு நல்ல பொறியியல் கல்லூரியை வெறும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை மட்டும் கொண்டு மதிப்பிடக் கூடாது. வாடிக்கையாளரின் பிரச்சினையைத் தாமாகவே புரிந்து கொண்டு தீர்வை வடிவமைக்கும் 'முன்னணிப் பொறியாளர்களை' உருவாக்குவதே அவசியம். வெறும் நேர்காணல் பயிற்சிகள் மூலம் இந்த ஆழமான திறனை உருவாக்க முடியாது என்பதால், பி.ஐ.டி., எப்போதும் உண்மையான, நீடித்த திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன் விளைவாகவே, இக்கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விகிதமும் சம்பள நிலையும் பல தசாப்தங்களாகச் சீராக உயர்ந்து நிலையாக இருந்து வருகிறது.ஆராய்ச்சிஇந்தியப் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் தரவரிசைப் பட்டியல்களுக்காகவே நடத்தப்படுகின்றன என்ற விமர்சனம் உண்மையானது, உண்மையான ஆராய்ச்சி என்பது பொறுமையான நீண்ட கால அர்ப்பணிப்பைக் கோருவது. பல தலைமுறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரே சவாலில் தொடர்ந்து பணியாற்றி, அந்த அறிவைப் பாதுகாக்கும் சூழலை பி.ஐ.டி., கட்டமைத்து வருகிறது. தரவரிசைக்காக அல்லாமல், சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் தாக்கத்திற்காக நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மூலம் பி.ஐ.டி., விரைவில் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும்.சாதனைபள்ளி மதிப்பெண்கள் ஒரு மாணவரின் உண்மையான திறனை அளவிடாது என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த பல பி.ஐ.டி., மாணவர்கள், சர்வதேசப் போட்டிகளில் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மிஞ்சி வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் எந்தப் பள்ளியில் படித்தார்கள் என்பதை விட, அவர்கள் வந்தபின் எத்தகைய சூழலில் வளர்கிறார்கள் என்பதே முக்கியம். சர்வதேச ஹாக்கதான்கள், உலக திறன் போட்டிகள் மற்றும் 20 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்று மாணவர்கள் சாதனை படைத்து வருவது, அவர்களுக்கு வழங்கப்படும் சமத்துவமான சர்வதேச வாய்ப்புகளினாலும் திறன்களினாலுமே சாத்தியமாகியுள்ளது.புதிய தேசிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. இக்கொள்கையின் மூலம் மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி தொழில் அனுபவம் பெற முடியும். ஒரு இயந்திரவியல் பொறியாளர் சட்டம் படிக்கவோ அல்லது கணினி விஞ்ஞானி இசையை ஆராயவோ இக்கொள்கை வழிவகை செய்கிறடடது.தலைமைத்திறன்இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் மாணவர்களை மனித உறவுகளிலிருந்து விலக்கி வைத்துள்ளதால், அவர்களுக்குத் தலைமைத்திறன் மற்றும் குழு உணர்வை வளர்க்கும் பொறுப்பை பி.ஐ.டி., முழுமையாக ஏற்றுள்ளது. இங்கு முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு மாணவரும் ஒரு சிறு தொடக்க நிறுவனம் போல செயல்படும் மாணவர் குழுவில் இணைக்கப்படுகிறார்கள். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் திட்டங்களைக் கட்டமைப்பதால், அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் போதே ஒரு சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகத் தன்னம்பிக்கையுடன் வெளியேறுகிறார்கள்.மேலும், திறமை வெளியேற்றம் என்பது நாட்டின் தொழில்நுட்ப இறையாண்மையைப் பாதிக்கும் கவலையான விஷயம் என்றாலும், தற்போதைய இந்தியாவில் நிலவரம் வேகமாக மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொடக்க நிறுவன சூழலில் அரசு முதலீடு செய்து வருவதால், திறமையான பட்டதாரிகள் இந்தியாவிலேயே தொழில் தொடங்க விரும்புகிறார்கள். முன்பு வெளிநாடு சென்றவர்கள் தற்போது உலக தரத்திலான அனுபவத்துடன் தாயகம் திரும்பி, பரஸ்பர அறிவு பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், இந்தியாவின் மிகப்பெரிய பலவீனமாக இருந்த இந்தத் திறமை ஓட்டம், தற்போது நாட்டின் மிகப்பெரிய பலமாக மாறி வருகிறது என்றும், அத்தகைய பொறியாளர்களை உருவாக்குவதில் பி.ஐ.டி., பெருமையுடன் பங்கு வகிக்கிறது. -எஸ்.வி.பாலசுப்ரமணியம், தலைவர், பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்தியமங்கலம், ஈரோடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்