நுண்கலை போட்டிகள்
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களுக்கான நுண்கலை போட்டிகள் நடந்தன.இதில் விருதுநகர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சண்முகம் கலந்து கொண்டார். மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், குழு நடனம், பாட்டுப்போட்டிகள், நாடகங்கள் என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், முதல்வர் செந்தில் பரிசுகளை வழங்கினர்.