ஜன., 12ல் குரூப்-2; பிப்ரவரியில் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் 1,2 தேர்வுகள் நடத்துவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரூப்2 தேர்வில் 5,777 பேர் தேர்வு செய்யபட உள்ளனர். இத்தேர்வு முடிவுகள் ஜன. 12-ல் வெளியிடப்படும். குரூப்1-ல் 95 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.