பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணியில் 974 ஆசிரியர்கள்
தேனி: மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 974 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, கம்பம் ராமயெம் மெட்ரிக் பள்ளி ஆகிய இரு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. முதல் நாளில் முதன்மை தேர்வார்கள், கூர்ந்தாய்வாளர்கள் பணியை துவங்கி உள்ளனர். இன்று உதவி தேர்வர்கள் நிலையிலான ஆசிரியர்கள் திருத்தும் பணியை துவங்குகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் தேனி மையத்தில் 644 ஆசிரியர்கள், கம்பத்தில் 330 ஆசிரியர்கள் என 974 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ல் வெளியாகிறது.பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்.,10ல் துவங்குகிறது. தேனியில் முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யு., மெட்ரிக் பள்ளி, கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக் பள்ளி ஆகியன விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.