செப்.19ல் திருவாரூர் மத்திய பல்கலை. தொடக்கம்!
இந்தப் புதிய மத்திய பல்கலைகக்கழகத்தின் துணைவேந்தர் பி.பி., சஞ்சய் இத்தகவலைத் தெரிவித்தார். பல்கலைக்கழகம் செயல்படுவதற்கான தாற்காலிகக் கட்டடத்தை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார். வாடகை இல்லாமல் இந்தக் கட்டடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளதற்கு துணைவேந்தர் நன்றி தெரிவித்தார். இந்தக் கல்வியாண்டில் நான்கு பாடப்பிரிவுகளில் முதுலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவிகளுக்கான விடுதி சவதி தாற்காலிக பல்கலைக்கழகக் கட்டடத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர் தெரிவித்தார். இயல் அறிவியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை அடுத்த ஆண்டில் தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.