7,000 பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகம்
இவற்றில், 100 எம்.பி.பி.எஸ்., அலைவரிசை வேகத்துடன் கூடிய ஆன்லைன் இணைப்பு வசதியும் தரப்பட உள்ளது.தொழில்நுட்ப மேம்பாட்டை முழுமையாக பயன்படுத்தி, நகர் பகுதிகள் முதல் கிராமங்கள் வரை, அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெறும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வகங்கள் வழியே, ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவும்; மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பித்தல் பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி துறை செயலர், குமரகுருபரன் கூறினார்.