உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

டில்லி உஷ்ஷ்ஷ்: கோபத்தில் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வடமாநிலங்களில், பான்மசாலா போடும் பழக்கம் அதிகம். தற்போது, இது தமிழர்களுக்கும் தொத்தி விட்டது. பான்பராக் போட்டு, கண்ட இடத்தில் எச்சில் துப்புவதில், முதலிடம் வடமாநிலத்தவர்க்கு தான்!சமீபத்தில் உ.பி., சட்டசபை வளாகத்தில், எம்.எல்.ஏ., ஒருவர் பான்மசாலா எச்சிலை சுவரில் துப்பி விட்டார்; சுத்தமாக வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில், இந்த பான்மசாலா கறை நன்றாக தெரிந்தது.'எங்கும், எதிலும் சுத்தமாக இருக்க வேண்டும் என பிரதமரும், உ.பி., முதல்வரும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்படி செய்யலாமா?' என, கோபப்பட்ட உ.பி., சட்டசபை சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,வை கண்டித்தார்; ஆனால், அவருடைய பெயரை வெளியிடவில்லை.இந்த விஷயம் தெரிந்த உடனேயே, பிரதமர் அலுவலகத்திலிருந்து, சபாநாயகருக்கு போன் வந்ததாம். 'இப்படி அசுத்தம் செய்தவரை சும்மா விடக்கூடாது. 'துாய்மையான இந்தியா' என, திட்டத்தை நிறைவேற்றி வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளே இப்படி செய்யலாமா? நிச்சயம், இதற்கு தண்டனை தர வேண்டும். யாராக இருந்தாலும் அந்த எம்.எல்.ஏ.,விற்கு ஒரு மாத சம்பளத்தை, 'கட்' செய்ய வேண்டும்' என கூறினாராம் பிரதமர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivagiri
மார் 11, 2025 14:17

அய்யே, குஜராத்தில் அனைத்து ஊர் சாலைகளிலும், நடக்கவே முடியாது, இரண்டு பக்கமும் காவி சாயம் அடித்தது போல பான் - புகையிலை - துப்பி துப்பி, சே சே . . . டீ கடைகளில் கப்புகள், டம்ளர் எல்லாம், எவ்வளவு கழுவினாலும், நாத்தம் அடிக்கும், டீயை குடித்து முடிப்பதற்குள் உதடுகளில், புண்ணே வந்துவிடும், - பேப்பர் கப் கிடையாது, வட இந்தியா முழுவதும் இப்படித்தான், அதே போல இப்போதெல்லாம், இங்கேயும் சிறுவர்கள் முதல் மெத்த படித்த மேதாவிகள் வரை, புகையிலையை வாயில் ஒதுக்கிக்கொண்டு, துப்பிக் கொண்டே இருக்கிறார்கள், அதோடு பீடி நாத்தம், அதோடு சரக்கு நாத்தம் வேறு - எந்த கடையிலும், டீ, ஜூஸ், தண்ணீர், டம்பளர்களில் குடிக்க முடியாது, ஒரே நாத்தம், அதை விட கொடுமை, டீவி ஷோக்களில், வரும் டாக்டர்கள், பல செலிபிரிட்டிகள், பேட்டி கொடுப்பவர்கள், பட்டிமன்றம்களில் பேசுபவர்கள், வாயில் புகையிலையை ஒதுக்கி கொண்டு, அடிக்கடி எச்சில் விழுங்கி கொண்டு, வாயை ஒருமாதிரி, முடியும் மூடிடாமலும், வ்வ்வ்வ் என்று பேசுவது, பார்த்தாலே வாந்தி வருகிறது... இப்போ அதுதான் பிரெஸ்டிஜ் என்று நினைத்துக் கொள்கிறார்கள் . . .


Krishnamurthy Venkatesan
மார் 09, 2025 13:53

கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவோர், பொது இடங்களில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம், சிறை தண்டனை என திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் கொண்டு வந்த சட்ட முறைகளினால் தமிழ்நாட்டில் இது வெகுவாக குறைந்து இருந்தது.


bharathi
மார் 09, 2025 12:02

The society is in a big risk by adopting a different culture by not respecting a law in force especially the traffic violation. unless a serious punishment in force we may not control anymore.


S. Gopalakrishnan
மார் 09, 2025 11:25

"தொத்தி விட்டது" என்பது தவறு "தொற்றி விட்டது" என்று எழுதவும் .


murthy c k
மார் 09, 2025 09:47

அப்பாவி எப்படி அப்பாவியா இருக்கீங்க, எல்லா கடைகளிலும் பான் பராக்,gutka எல்லாம் kidaikiradhu


MUTHU
மார் 09, 2025 09:39

தமிழ்நாட்டிலும் முன்பு உப்பிய நாற்றமெடுத்த வாயுடன் கண்ட இடத்தில் துப்பிக்கொண்டு இருந்தனர். இதை தடை செய்ததற்கு நாம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 08:38

நான் ஒரு முறை ஜாம்ஷெட்பூர் உள்ள ஒரு பிரபலமான மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். அங்கு கேன்டீனில் இட்லி தோசை அந்த ஊர் மக்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள். நமது தமிழகத்தில் கூட மதிய வேளையில் ஓட்டலில் இட்லி தோசை கிடைக்காது ஆனால் அங்கு இட்லி தோசை மூன்று நேரமும் கிடைக்கும் சட்னி சாம்பார் நமது ஊர் போலவே சுவையாக இருந்தது. அந்த மருத்துவ மனையில் காலையில் பார்த்தால் சுகாதார ஊழியர்கள் சோப்பு தண்ணீர் போட்டு தரையை கழுவிக்கொண்டு இருந்தார்கள் என்னடா என்று பார்த்தால் பான்பராக் எச்சில். நோயாளி கட்டிலுக்கு அடியில் பெரிய வாய் அகலமான பாத்திரம் வைத்து இருந்தார்கள். எதற்கு என்று பார்த்தால் நோயாளி நோயாளியை பார்க்க வருபவர்கள் பான் பராக் எச்சில் துப்புவதற்கு. தமிழகத்திலும் தற்போது பான் பராக் ஹான்ஸ் உபயோகிப்போர் அதிகமாகி கொண்டு வருகிறார்கள்.


அப்பாவி
மார் 09, 2025 07:33

பான்பராக், குட்காவை தடை செய ஒரே மாநிலம் தமிழகம்தான். தின்னுட்டு துப்புறவங்க மிகவும் குறைவு. அங்கிருந்து வடக்கன்சையும், இந்தியையும் திணிச்சு பாழ்பண்ண முயற்சி நடக்கிறது.


MUTHU
மார் 09, 2025 09:43

யாருடா கோமாளி. இங்கே என்ன வாழுது. ஒவ்வொரு கிராமத்திற்கு செல்லும்முன் நம்மை வரவேற்பது சாலையின் இருபுறமும் குமிகுமியாய் உள்ள சௌஸால்யம் சாக்கடை மற்றும் அதில் உழலும் பன்றிகளே.


அப்புசாமி
மார் 09, 2025 07:31

ஏன்? பதவியப் பறித்து, கட்சியிலிருந்து நீக்கிற வேண்டியது தானே? முக்காவாசி கூடாரம் காலியாயிரும்.


Sakthi,sivagangai
மார் 09, 2025 08:34

அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க மறந்துட்ட அதையும் அப்படி கேளு அப்புசாமி.


Yes your honor
மார் 09, 2025 08:56

எதிர்க்கட்சி கூடாரமா?


பல்லவி
மார் 09, 2025 07:11

பலர் செய்யும் தவறுகளுக்கு ஒருவர் பலிகடா ஆகி விடுகிறார்


புதிய வீடியோ