உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

மொழி பிரச்னையில் மாணவர்கள் எதிர்காலம்

'மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்' என, கவர்னர் ரவி தெரிவிக்க, அதற்கு, 'தமிழகம் வந்து, மொழி பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை' என, தமிழக அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.கவர்னர் ரவி அறிக்கை: தென் மாவட்டங்களை சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் 'ஸ்டார்ட் அப்'கள், பெண் தொழில் முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும், வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும், தொழில் முனைவுத்திறனையும் காண்பது, ஊக்கம் அளிப்பதாக இருந்தது.இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும், இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில் மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர்.இளைஞர்கள் இடையே காணப்படும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்பு செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இருமொழிக் கொள்கை காரணமாக, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது, இந்த பிராந்திய இளைஞர்கள், வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், துரதிருஷ்டவசமாக எந்தவொரு தென் மாநில மொழியையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக, அவர்கள் உணர்கின்றனர். இது உண்மையிலேயே நியாயமற்றது.மொழியை படிப்பதற்கான தேர்வு, நம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மொழி கொள்கையால் வாய்ப்பிழப்பு!

வெறுப்பேறிய கண்களுக்கு தெரியாது

அமைச்சர் ரகுபதி பதில்: தமிழகம் பொருளாதாரத்திலும், கல்வியிலும், பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், தமிழகத்தின் மீது வெறுப்பை உமிழ்வதையே, தன் கடமையென கவர்னர் ரவி செயலாற்றி வருகிறார். தன் அரசியலமைப்பு கடமைகளை மறந்து, ஆதாரமற்ற அவதுாறுகளை வைத்து தமிழகத்தை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே, மத்திய பா.ஜ., அரசு, ரவியை கவர்னராக வைத்திருக்கிறது.தன் சமூக வலைதள கணக்கை, இதற்காகவே பிரதானமாக பயன்படுத்தி வரும் கவர்னர், தமிழகம் எதில் பின்தங்கியுள்ளது என சொல்ல முடியுமா? கல்வி, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி, இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை, மத்திய அரசின் புள்ளிவிபரங்களே சொல்லும்.அதை எல்லாம் கவர்னர் ரவி படித்தால்தானே... படித்தாலும், தமிழகத்தின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவை எப்படித் தெரியும்?தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சி, இருமொழிக் கொள்கையால் சாதித்தது. தமிழகத்தில் எப்படியாவது ஹிந்தியை திணிக்கலாம். அதற்கு புதிய கல்விக் கொள்கையை, ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும், ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்? தமிழ், தமிழகம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் கவர்னர் ரவி, தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து பாடம் எடுக்க வேண்டாம். சனாதனத்தையும், சமஸ்கிருதத்தையும் தமிழகத்தில் காலுான்ற செய்ய, குட்டிக்கரணம் போடும் கவர்னரின் நடவடிக்கைகள், தமிழ் மண்ணில் வேறுான்றவில்லை.அப்படித்தான் மும்மொழிக் கொள்கையும் மூக்கறுபட்டு நிற்கப் போகிறது. மொழி தேர்வு எது; மொழி திணிப்பு எது என்பது எங்களுக்கு தெரியும். இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

நிஜதமிழன்
மார் 01, 2025 20:08

தமிழக்காக குரல் விடும் தமது வீடுகளில் பேசுவது ஹிந்தி மற்றும் உருது. வெளியில் போடுவது இரட்டை வேஷம்


vijai hindu
மார் 01, 2025 19:27

இந்தி வேண்டாம் மது வேண்டும் இதுதான் மாடல் அரசின் கொள்கை


pmsamy
மார் 01, 2025 17:49

ஒரு கவர்னர் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்


vivek
மார் 01, 2025 20:09

ஒரு மட சாம்பிராணி சட்ட துறை அமைச்சர் பதவி விலகவேண்டும்


ES
மார் 01, 2025 16:27

If this is the issue why is everyone coming from north to work in 2 language state TN. People know what to learn its our choice dont force languages it will never ever work in our state


vivek
மார் 01, 2025 17:53

Mr ES all people in tamilnadu are in tasmac....hence north people are coming here....go to tirupur and coimbatore ....they rely on North Indians......shit and shut up your mouth


pv, முத்தூர்
மார் 01, 2025 14:08

மக்கள்: மது வேண்டாம், இந்தி வேண்டும். அரசு: மது தருகிறோம், இந்தி வேண்டாம்.


முருகன்
மார் 01, 2025 13:38

இவ்வளவு காலமும் இரு மொழி படித்த நமது மானவர்கள் உள் நாடு வெளி நாடுகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் போது இவர்களுக்கு இப்போது என்ன பிரச்சினை


vivek
மார் 01, 2025 15:00

அவர்கள் இரண்டு மொழி தான் படித்தோம் என்று சொல்லிவிட்டு வெளிநாடு சென்றார்களா அறிவிலி


sankar
மார் 01, 2025 11:23

அமைச்சர் பாவம்


ஆரூர் ரங்
மார் 01, 2025 10:40

கல்வியில் நம்மைவிட முன்னணியில் உள்ள கேரளாவில் மும்மொழிக் கல்விதான். சென்னை ஐஐடி யில் பெரும்பாலான மாணவர்கள் மும்மொழிக் கல்வியறிவுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தவர். மும்மொழிக் கல்வியறிவுள்ள கர்நாடகாவில்தான் பெரிய ஐடி நிறுவனங்களின் தலைமையகங்கள் உள்ளன. அமெரிக்காவில் உயர்ந்த நிலையிலுள்ள இந்தியர்களில் தெலுங்கு பேசுபவர்களே அதிகம். இதனால் மலையாள, தெலுங்கு, கன்னடம் அழிந்து விடவில்லை. 21ம் பக்க பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறுபவர்கள் தமிழர்களே.


கண்ணன்
மார் 01, 2025 10:16

படிப்பறிவற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவே கூடாது என்பனை மக்கள் உணர வேண்டும்


ஆரூர் ரங்
மார் 01, 2025 09:24

முன்னேறிய மாநிலத்துக்கு மூன்று மொழிகள் தேவையில்லை. சைகை மொழி ஒன்றே போதும். ஆங்கிலத்தைக் கூட செயற்கை நுண்ணறிவு மூலம் புரிந்து கொள்வார்கள். முதல்வருக்கே சரியாக வராத தமிழ் சிறு பிள்ளைகளுக்கு எதற்கு?


முக்கிய வீடியோ