மேலும் செய்திகள்
20 மையங்களில் இன்று உதவி பேராசிரியர் தேர்வு
27-Dec-2025
கோவை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சார்பில் நேற்று நடந்த, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், 50 மதிப்பெண் கொண்ட தாள் இரண்டில், தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களை குறித்து கேட்கப்பட்டு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நேற்று தேர்வு நடத்தப்பட்டது. கோவையில், இத்தேர்வுக்கு 4,745 பேர் பதிவு செய்து இருந்ததில், 3,996 பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். காலையில், தாள்-1 தேர்வு 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரமும், மதியம் 50 மதிப்பெண்களுக்கான தாள் -2 தேர்வு ஒரு மணி நேரமும் நடந்தது. தாள்-1 கடினமாக இருந்ததாக தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். தாள் -2ல் ஐந்தில் ஒரு கேள்விக்கு கட்டுரை வடிவில் பதில் அளிக்கவேண்டும். அதில் மூன்றாவது கேள்வியில், 'இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் விளக்கம் மற்றும் அதன் தாக்கம்' குறித்து எழுதவேண்டும். ஒவ்வொரு திட்டத்திற்கும் 10 மதிப்பெண் வீதம், 50 மதிப்பெண் என வகைப்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வர் ஒருவர் கூறுகையில்,''ஆங்கில மேஜர் பிரிவில் தேர்வு எழுதினேன். தாள் ஒன்று கேள்விகள் கடினமாக இருந்தன. தாள் இரண்டு அரசின் திட்டங்கள் ஐந்து தலைப்புகளில் கேட்டு இருந்ததால், பலர் அதை எதிர்கொண்டோம். ஒரு திட்டத்திற்கு, 10 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருந்ததால் எளிதாக இருந்தது. ஆனால், உதவி பேராசிரியர் பணிக்கு இந்த கேள்விகள் ஏன் என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது,'' என்றார்.
27-Dec-2025