உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நிலுவை வழக்குகளால் சிக்கல்

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நிலுவை வழக்குகளால் சிக்கல்

கோவை: தமிழக அரசு லஞ்ச ஒழிப்புக்கு எதிரான தீவிரமாக செயல்படுகிறது. பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு இறுதியாக தண்டனை பெற்றுத்தரும் நீதிமன்ற நடைமுறை ஆண்டுக்கணக்கில் இழுப்பதால், அதன் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், 2024-25ல் 199 டிராப் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம், 681 வழக்குகள் பதிவாகியுள்ளன. நடப்பாண்டில், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேலும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.புதிய வழக்குகள் பதிவு செய்யும் வேகத்திற்கு இணையாக, பழைய வழக்குகள் நீதிமன்றங்களில் முடியாததால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-25 புள்ளிவிபரங்களின் படி, தமிழகம் முழுவதும் பத்தாண்டுகளில் 1,385 லஞ்ச வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் 3,380 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.குற்றவியல் வழக்குகள் மட்டுமின்றி, 624 தீர்ப்பாய விசாரணைகளும் நிலுவையில் உள்ளன. இதில் 1,527 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும், 724 துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளில் 5,430 அரசு அதிகாரிகள் தொடர்புடையவர்களாக உள்ளனர். இதுவும் துறை ரீதியான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவடையாமல் நீடித்து வருகிறது.தமிழகத்தில் லஞ்ச செயல்பாடுகளை வேரோடு அழிக்க நினைக்கும் முதல்வர், நீதிமன்ற செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை களையவேண்டியது அவசியம். பல வழக்குகள் பத்து ஆண்டுகள் கடந்தும் முடியாத நிலையில் புதிய வழக்குகள் பதிவு செய்யும் போது, வழக்குகள் தேக்கமடையும் சிக்கல் உள்ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'லஞ்ச புகாரின் கீழ், ஆவணங்களை சேகரிப்பதில், குறிப்பாக, அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீது அந்தந்த துறைகளில் ஆவணம் ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. சாட்சிகள் அடிக்கடி ஆஜராகாதது, அதிகாரிகள் இடமாற்றம், சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் விசாரணை நீண்டு செல்கின்றன,' என்றார்.கோவை மாவட்ட வழக்கறிஞர் முகமதுசமீர் கூறுகையில், ''நீதிமன்றங்களில் நான்கு பேர் செய்யும் வேலை ஒருவர் செய்யும் சூழல் உள்ளன. தேவையான பணியிடங்களை உருவாக்கவேண்டியதுஅவசியம். தவிர, அரசுத்துறை சார்ந்த வழக்குகளில் வேண்டுமென்ேற தாமதப் படுத்துவதும், ஆஜராகாமல் தவிர்ப்பதும் நடக்கிறது.''வழக்குகளின் தன்மையை பொறுத்து கால அவகாசம் நிர்ணயித்து அதை முறையாக பின்பற்றவேண்டியது அவசியம். அவகாசம் கடந்தால் காரணத்தையும் பதிவு செய்யும் நடைமுறை அவசியம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 13, 2026 10:01

நாம் ஏற்கனவே கூறியதுதான். லஞ்ச ஊழல்கள் தொடர்வதற்கும் அது சம்பந்தமான வழக்குகள் முடியாமல் இருப்பதற்கும் காரணம் சில லஞ்ச நீதிபதிகள் நீதிமன்றங்களில் இருப்பதுதான். இந்த திருட்டு திராவிடம் எல்லா இடங்களிலும் தனது கிளையை பரப்பி உள்ளது. ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் சீரழித்து வைத்துவிட்டார்கள் திருட்டு திராவிட கூட்டமான திமுக அதிமுக. நீதியரசர்களும் தாங்கள் எதோ வானத்தில் இருந்து நேரடியாக இறங்கி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் விரும்பினால்தான் வேலை செய்வார்கள். காவல்துறையுடன் கைகோர்த்துக்கொண்டு குற்றவாளிகள் தரும் லஞ்சத்திற்க்காக வழக்கை வேண்டுமென்றே ஒத்திவைத்து இழுத்துக்கடத்துவார்கள். நீர்த்துப்போக செய்வார்கள். அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் நினைத்தால்தான் தீர்ப்பை வாங்க முடியும் துட்டு கொடுத்து. இன்றைக்கு நீதித்துறை உட்பட அனைத்து அரசு நிர்வாகங்களிலும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. யாருக்கும் பொறுப்பு இல்லை. இதை சரி செய்ய வேண்டுமானால், தப்பு நடந்தாலோ, நிர்வாகம் சரியாக நடக்கவில்லையெனில் அதற்க்கு சம்பந்தப்பட்ட தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த முறை பிரதமர், முதல்வர் முதல் நிர்வாகத்தின் கடைசி படிநிலை வரை அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் பொறுப்போடு வேலை செய்வார்கள். உதாரணமாக நான் ஒரு அமைச்சர் என்றால் எனது துறையில் எந்தவிதமான ஊழலும், நிர்வாக சீர்கேடும் நடந்தால் நான்தான் பொறுப்பு. அப்படி இருந்தால் அனைவரும் தங்கள் துறையில் தப்பு நடக்காமல் பாரித்துக்கொள்வதில் கவனம் செலுத்துவார்கள். மீறி தப்பு செய்பவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரே மாதத்தில் பெரிய மாற்றத்தை காணலாம். ஆனால், இன்றைக்கு பொறுப்பு இல்லாததால், கூடவே சேர்ந்து குற்றம் செய்துவிட்டு தப்பு வெளிவந்தவுடன் அதை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். முதல்வர் விஜய் உடனடியாக ஊழல்வாதிகளை நீதித்துறை உட்பட அனைத்து அரசு நிர்வாகங்களிடம் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும். அது உடனடி தேவை. செய்வாரா?


S SRINIVASAN
ஜூலை 12, 2026 15:43

ஒரு வருடத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு 172 தினங்களும், ஹை கோர்டுகளுக்கு 155 தினங்களும், மாவட்ட நீதிமன்றங்களுக்கு 120 நாட்களும் சராசரி விடுமுறை நாட்கள். பள்ளிகளுக்கு கூட இவ்வளவு நாட்கள் விடுமுறை இல்லை. இதில் வாய்தாக்கள் வேறு. இந்த லட்சணத்தில் எப்படி நீதி சீக்கிரம் வழங்க முடியும். எத்தனை சிறப்பு நீதி மன்றங்கள் கொண்டுவந்தாலும் வழக்குகளின் எண்ணிக்கை குறையாது.


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2026 19:00

மிக சரியான பதிவு. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்ஙளின் கோடைவிடுமுறை தசரா விடுமுறைகளை குறைக்க வேண்டும். வெள்ளைகாரன் காலத்தில் நீதிமன்றங்களில் ஏசி கிடையாது. வெள்ளைகாரன் சொந்த நாட்டுக்கு போனான். தற்பொழுது நீதிமன்றங்களில் ஏசி வசதியுள்ளது. வழக்குககள் ஆயிரக்கணக்கில் தேங்கி நிற்க்கையில் மாதக்கணக்கில் கோடை விடுமுறை எதுக்கு..? கோர்ட்டுகளுக்கும் பள்ளிகளைப்போல் மழை புயல் லீவு விட்டால் விளங்கிடும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 14, 2026 09:48

எல்லாம் பச்சப்புள்ளைங்க பாருங்க. அதான் இவ்வளவு லீவு....ஹா ஹா.


aasha
ஜூலை 12, 2026 12:42

அருமையான செய்தி. கோர்ட் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே நாடு முன்னேறும். தினமலருக்கு நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை