உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிரடியாக பா.ஜ., திரட்டும் பைல்ஸ்-3 ஆவணங்கள்: பதற்றத்தில் தமிழக ஒப்பந்ததாரர்கள்!

அதிரடியாக பா.ஜ., திரட்டும் பைல்ஸ்-3 ஆவணங்கள்: பதற்றத்தில் தமிழக ஒப்பந்ததாரர்கள்!

தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்ட பின், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், தமிழக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.ஏற்கனவே, 'பைல்ஸ் -1, பைல்ஸ் - 2' என இரண்டு பட்டியல்களை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, அடுத்தக்கட்டமாக, 'பைல்ஸ் - 3' வெளியிடத் தயாராகி கொண்டிருக்கிறார். 'வரும் புத்தாண்டில் அதை வெளியிடுவேன்' என்றும், சமீபத்தில் அவர் அறிவித்தார். இதையடுத்து, தமிழகம் முழுதும் அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விபரங்களை, அண்ணாமலையால் இதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழு திரட்டிக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே இருக்கும் பா.ஜ., முக்கிய பிரமுகர்களும், விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றனர்.இதற்கிடையில், இந்த விபரங்கள் வெளியே கசிந்துவிட, திரட்டப்படும் பட்டியலில் தங்கள் பெயரோ, நிறுவனமோ இருக்கின்றதா என்பதை அறிய, தமிழகம் முழுதும் இருக்கும் கான்ட்ராக்டர்கள், பா.ஜ.,வில் இருக்கும் பெரும் தலைகள் வாயிலாக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தின் பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, மீன் வளத்துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக, ஏராளமான மக்கள்நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டங்கள் அரசு தரப்பில் தீட்டப்பட்டாலும், அதை முழுமைப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொறுப்பு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகிறது.குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறை என்றால், அதன் வாயிலாக போடப்படும் அனைத்து சாலைகளும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கே வழங்கப்படுகின்றன. அதேபோல, பொதுப்பணித் துறை வாயிலாக, தமிழகம் முழுதும் அரசுத் துறைகளுக்கான அனைத்து கட்டுமான வேலைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துறை அதிகாரிகள், கட்டுமானத்தை மேற்கொள்ளும் பணியை தனியார் ஒப்பந்ததாரர்களிடமே அளிக்கின்றனர்.சமூகநலத் துறையில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களிலும், தனியார் ஒப்பந்ததாரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இப்படி தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்குவதற்காக, அரசுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏகப்பட்ட பணத்தை லஞ்சமாக பெறுகின்றனர். இதனாலேயே தரமில்லாத பணிகள் நடக்கின்றன. அமைச்சர்களைக் கடந்தும், ஒப்பந்ததாரர்கள் அளிக்கும் லஞ்சப் பணம் பயணிக்கிறது.இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்பதற்காகத்தான், ஊழல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, தொடர்ச்சியாக 'பைல்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார் அண்ணாமலை. வரும் புத்தாண்டில் வெளியிடவிருக்கும் 'பைல்ஸ் -- 3'க்கு ஆதாரம் மற்றும் ஆவணங்களை திரட்டும் பணி, தமிழகம் முழுக்க துரிதமாக நடந்து வருகிறது. இதனால், தமிழக முழுதும் இருக்கும் ஒப்பந்ததாரர்கள் பலரும் பதற்றம் அடைந்து உள்ளனர்.அண்ணாமலை திரட்டும் ஆதாரங்களில் தங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை அறிய படாதபாடுபடுகின்றனர். இதற்காக, அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள், பா.ஜ., தலைவர்கள் வாயிலாக தகவல் திரட்டும் முயற்சியில் உள்ளனர். இதை அறிந்த அண்ணாமலை, 'தகவல்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் கசிந்துவிடக் கூடாது' என, ஊழல் தகவல் திரட்டுவோருக்கும், விபரங்கள் அறிந்த கட்சி முன்னணியினருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Ethiraj
டிச 21, 2024 11:58

All govt staff serving and retired,contractors,public ,opposition party members may be giving data to Annamalai so that his file is full. Ed ,cbi ,dvac ,cbcid,it , ,court,media may act and remove cancer cell from public life


Chandrasekaran
டிச 21, 2024 09:29

அதெப்படி. இது உட்கட்சியிலிருப்போருக்கு வாய்ப்பு கட்சி கவனிக்காததை எதிரிகள் கவனித்து விடுவார்கள். .உடனிருந்தோரால்தானே 2024ல் தோல்வி.அதிருப்தியாளர்கள் காங்கிரஸுக்கு அடுத்து இங்கேதானே அதிகம். தொழிலாய் நினைக்கவில்லை எனௌறு கூறினாலும் தொண்டாய் நினைப்பதில்லையே. பாவம் அண்ணாமலை.


varatharajan
டிச 20, 2024 23:15

தேவையில்லாத நியூஸ் எல்லாம் போடாதீங்க


varatharajan
டிச 20, 2024 23:13

நம்ம தலைவிதி


Azar Mufeen
டிச 20, 2024 22:24

அய்யா நம்ம ஜெயிஷா எடுத்த காண்ட்ராக்ட் பத்தின பைல்ஸ் வருமா?


V GOPALAN
டிச 20, 2024 19:43

Unfortunately our Tamilnadu High Court judges instead of supporting annamalai by appointing separate panel to study this our Judge also will cry and feel sorry along with voters instead of making concerned IAS collectors responsible and put them in jail. Liberal bail will be given by our judges. Our stalin will give good post to all ministries


Barakat Ali
டிச 20, 2024 19:39

ஏற்கனவே, பைல்ஸ் -1, பைல்ஸ் - 2 என இரண்டு பட்டியல்களை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, அவற்றால் மக்களுக்கு என்ன நன்மை விளைந்தது என்பதை புத்தாண்டில் விளக்கிச் சொல்லலாம் .... அதுகூடப் போதும் ..... செய்வாரா ????


Barakat Ali
டிச 20, 2024 19:36

1. RTI மூலமாக தகவல்களைத் திரட்டலாம் ..... அதன் படி இப்போது DMK Files வெளியிட குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு முன்பாவது வேலையைத் துவக்கியிருக்க வேண்டும் .... அல்லது 2. அதிகாரம் இருந்தால் சில நபர்கள் மட்டும் உரிய அனுமதி பெற்று அரசுத் துறைகளிடம் தகவல்களைத் திரட்டலாம் ..... இப்படி இல்லாமல் 3. அரசு அலுவலர்களை மிரட்டி அல்லது பணம் கொடுத்து ஒரு கட்சியினர் தகவல்களைத் திரட்டுவதும் சாத்தியமே ..... மூன்றாவது வழியில் திரட்டுவது சட்டபூர்வமானது அல்ல .... இவ்வழியில் தவறான தகவல்களும் அளிக்கப்பட வாய்ப்பு .... இவர்களே சிக்கிக்கொள்வார்கள் ....


வாசகர்
டிச 20, 2024 18:57

விஞ்ஞான ஊழலை கோர்ட் மூலம் தண்டிக்க முடியாது. மக்கள் மண்றம்தான் சரியானது. சிங்கம் சரியாகத்தான் செயல்படுகிறது. இன்று இல்லை என்றாலும் விரைவில் வெற்றி கிட்டும். வாழ்க தலைவர் அண்ணாமலை.


SRITHAR MADHAVAN
டிச 20, 2024 17:11

கோப்புகளைப் பற்றி வாக்காளர்கள் கவலைப்படவில்லை. ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கவலைப்படுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை