உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ., மாநில நிர்வாகிகள் நியமனம்; டெல்டா மாவட்டங்களுக்கு டாட்டா

பா.ஜ., மாநில நிர்வாகிகள் நியமனம்; டெல்டா மாவட்டங்களுக்கு டாட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி : தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நியமனத்தில், டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, சென்னைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பது, அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட மாநில நிர்வாகிகள் பட்டியலில், துணைத் தலைவர்களாக குஷ்பு, சசிகலா புஷ்பா உட்பட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலர், இளைஞர் அணி தலைவர், மாநில செயலர் என பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 51 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சி ரீதியாக திருச்சியை பெருங்கோட்டமாக பா.ஜ., வைத்துள்ளது. அதில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன. ஆனால், மாநில நிர்வாகிகள் பட்டியலில், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலுார் மாவட்டங்களில், ஒருவருக்கு கூட பொறுப்பு வழங்கவில்லை. திருச்சிக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய மாநில நிர்வாகிகள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. திருவாரூர் தவிர, மற்ற டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது, பா.ஜ.,வினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், 14 துணைத் தலைவர்களில், தென் சென்னையில் இருந்து மட்டும் குஷ்பு, ஜெயபிரகாஷ், டால்பின் ஸ்ரீதர், வி.பி.துரைசாமி ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர். மேலும், 14 துணைத் தலைவர்களில், எட்டு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்; அறிவிக்கப்பட்ட 51 நிர்வாகிகளில், 23 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SP
ஆக 02, 2025 23:38

எத்தனை பேரை நியமித்தாலும் எந்த பிரயோஜனமும் கிடையாது. வேர் பிடித்து வளரும் நேரத்தில் வெந்நீரை ஊற்றி விட்டார்கள்.


Rajagiri Apparswamy
ஆக 02, 2025 09:49

டெல்டா மாவட்டங்களில் வசிப்போருக்கு மோடியின் விவசாயிகளுக்கான வருடம் ரூ6000 வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை


இறைவி
ஆக 02, 2025 06:13

ஆமாம். அப்படியே டெல்டா மாவட்டங்களிலிருந்து நியமிக்கப்பட்டு விட்டால் தமிழகத்தில் பிஜேபி வளர்ந்து விடுமா? இங்கு டெல்டா மாவட்டங்களில் இருந்த பிஜேபி தலைவர்கள் பெரும்பான்மையினர் தீயமுகவிலிருந்து வந்தவர்கள். அவர்களின் முகம் கூட கிராமத்திலிருக்கும் ஒரு விவசாயிக்கு தெரியாது. அவர்கள் எந்த ஒரு கிராமத்திற்கும் வருகை தந்ததோ, மக்களிடம் மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி விளக்கி, மக்களுக்கு அந்த திட்டங்கள் மூலம் பயன் கிடைக்க உதவியதோ கிடையாது. பதவிகளில் அவர்கள் உட்கார்ந்து கொண்டு தானும் மக்களை நேரில் சந்தித்து கட்சியை வளர்க்க மாட்டார்கள். உண்மையான பிஜேபி தொண்டன் பதவிக்கு வந்து கட்சியை வளர்க்கவும் விடமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தீயமுகவின் ஸ்லீப்பர் செல்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையே உள்ளிருந்து கெடுப்பதுதான். அடுத்துக் கெடுக்கும் துரோகிகள். பிஜேபி தமிழகத்தில் வளர விரும்பினால் நேரடியாக மக்கள் ஆதரவை பெறுங்கள். தீவிர RSS தொண்டனை பதவிக்கு கொண்டு வாருங்கள். தன்னலமற்ற அவர்களின் தொண்டால் மக்கள் பிஜேபியை நம்புவார்கள். மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு எந்த வித கட்சி பதவியும் கிடையாது என்று தீர்மானமாக இருங்கள். மக்கள் ஆதாயத்திற்காக கட்சி மாறி ஓட்டு போடலாம். ஆனால் கொள்கை என்று பேசும் ஒரு கட்சிக்காரன் கட்சி மாறினால் அவன் கேவலமான பச்சோந்தி. அவர்கள் உள்ளிருந்து அடுத்துக் கெடுக்கும் துரோகிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை