உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முன்னாள் காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண் இன்ஜினியர் கைது

முன்னாள் காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண் இன்ஜினியர் கைது

ஆமதாபாத்: முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக, குஜராத் உட்பட, 21 இடங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், பி.ஜே., மருத்துவக் கல்லுாரி மற்றும் தமிழகம், டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உட்பட, 21 இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.இது தொடர்பாக ஆமதாபாத் 'சைபர் கிரைம்' போலீசார் பல்வேறு மாநில சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். அப்போது போலி இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்தது சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் ரேனே ஜோஷில்டா என்பதும், அவர் சென்னையில் பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆமதாபாத் போலீசார் கடந்த 21ம் தேதி சென்னை வந்து ஜோஷில்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் சரத் சிங்கால் கூறியதாவது: ரோபோட்டிக் இன்ஜினியரான ஜோஷில்டா, டிவிஜ் பிரபாகர் என்ற இளைஞரை காதலித்துஉள்ளார். ஆனால், பிரபாகர் வேறு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பிரபாகர் தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில், அவரை பழிவாங்க போலி இ - மெயில் வாயிலாக ஜோஷில்டா வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த போலி மெயில்களில் சிலவற்றை பிரபாகர் பெயரிலும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், ஒரே கம்ப்யூட்டரில் இருந்து போலி இ - மெயிலை உருவாக்கியபோது, அவரது உண்மையான இ - மெயிலுடன் இணைந்துவிட்டது. இதை வைத்தே ஜோஷில்டா தான் குண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை கண்டுபிடித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Manaimaran
ஜூன் 25, 2025 17:51

இவருக்கு வையுங்க வெடி குண்டை


வல்லவன்
ஜூன் 25, 2025 17:51

பெண்ணின் கண்களில் அதிக கருவளையம்... மன நோய்க்கான அறிகுறி


Ramesh Sargam
ஜூன் 25, 2025 13:09

நன்றாக படித்த, நல்ல பணியில் உள்ள இந்த பெண்ணுக்கு ஏன் இந்த காதல் கிருக்கோ? அவன் கிடைக்காவிட்டால் என்ன? இப்படி எல்லாம் நமது டிவி சீரியல்களில் வரும். அதைப்பார்த்துதான் இன்று பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். டிவி சீரியல்கள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.


lana
ஜூன் 25, 2025 11:36

அழகா இருந்தால் போதுமா ஆபத்தான வகையில் சிந்திக்கும் புத்தி இருக்கே


Ganapathy
ஜூன் 25, 2025 10:25

நமது திராவிட பாடத்திட்டத்தின் உருவாக்கம் இவள். திராவிடம் எதுன்னு இனி எவனும் கேட்க மாட்டான்.


அப்பாவி
ஜூன் 25, 2025 09:35

இவளை ஏமாத்திட்டு இன்னொருத்தியுடன் ஓடுனவன் நல்லவன். பத்ம விருது குடுங்க.


வண்டு முருகன்
ஜூன் 25, 2025 09:19

இந்த பொண்ணு பாக்குறதுக்கு லட்சணமா அழகாவும் இருக்காங்க. அப்படி இருந்தும் ஏன் அந்த மனுஷன் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டார்னு தெரியலையே?


subramanian
ஜூன் 25, 2025 08:41

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.