உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்

சென்னை : 'பல்வேறு துறைகள் வாயிலாக நடந்து வரும் பணிகளை, உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சி மற்றும் அரசு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார். சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக, பல்வேறு துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.நேற்று ஒரே நாளில், விளையாட்டு, இயற்கை வளங்கள், போக்குவரத்து, உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக்கல்வி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், தொழிலாளர் நலன் உட்பட, 10 துறைகளின் செயலர்களுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனையில், சுரங்க கொள்கை உருவாக்குவது, அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடு மற்றும் அவற்றின் நிதி நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு விடுதிகளின் செயல்பாடு, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் வளர்க்கும் திட்டம், அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்ட செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் விளையாட்டு வளாகங்களின் கட்டுமான பணிகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். பணிகளை விரைவாக முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலர் முருகானந்தம், நிதித்துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

angbu ganesh
ஜூலை 09, 2025 11:35

இவ்ளோ நாள் தூங்கிட்டு இப்போ ஆனா இந்த மக்களை அடிக்கணும் இன்னும் ஏதும் அறியாம கேவலமா இவனுங்களுக்கு வோட்டு போடறானுங்க


Mani . V
ஜூலை 09, 2025 04:24

அப்படியே அறுத்துத் தள்ளிட்டாலும் ....


Raj S
ஜூலை 09, 2025 00:57

அடேங்கப்பா கைப்புள்ள கிளம்பிட்டாரு... தத்திக்கு என்ன தெரியும்னு நம்ம கோவாலு கேட்டது நினைவில் வருது...


N Srinivasan
ஜூலை 08, 2025 13:20

எல்லாரும் நல்லா வேலை செஞ்சு சீக்கிரம் வேலையே முடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஏதாவது பணம் கேட்டு சொல்ல வேண்டுமானால் சொல்லுங்கள் நானே லெட்டர் எழுதுகிறேன்


Kundalakesi
ஜூலை 08, 2025 12:59

கடந்த 5 வருடத்தில் இப்படி எத்தனை மீட்டிங் நடந்தது, அதனுடைய மினிட்ஸ் கிடைக்குமா.


lana
ஜூலை 08, 2025 10:53

முதலில் 6 முதல் 9 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் க்கு அடிப்படை மொழி மற்றும் கணிதம் அறிவியல் படிக்க புரிந்து படிக்க கற்றுக் கொடுங்கள். பிறகு கணினி AI எல்லாம் சொல்லி கொடுங்கள். இங்கு அடிப்படை கல்வி சொல்லி கொடுக்க உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சும்மா பிலிம் காட்ட வேண்டாம்


சந்திரன்
ஜூலை 08, 2025 07:58

ஏதாவது புரியுமுனு நினைக்கிறீங்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 08, 2025 08:39

யாருக்கு? பத்து துறை செயலாளர்களுக்கா ?


முக்கிய வீடியோ