உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / "டில்லி உஷ்ஷ்ஷ்...." பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டமா?

"டில்லி உஷ்ஷ்ஷ்...." பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் திட்டமா?

சமீபத்தில் டில்லியில் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடந்தது. அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நட்டா பங்கேற்றனர். தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. 'ஏன் அண்ணாமலை வரவில்லை?' என, இரண்டு முறை கேட்டாராம் அமித் ஷா. 'மற்ற முன்னாள் தலைவர்கள் வரும்போது ஏன் அண்ணாமலை பங்கேற்கவில்லை?' என தற்போதைய பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவும் கேட்டுள்ளார். இத்தனைக்கும் நட்டா, அண்ணாமலைக்கு போன் செய்து அழைப்பு விடுத்தாராம்.'எனக்கு முக்கிய வேலை இருப்பதால் பங்கேற்கவில்லை' என அண்ணாமலை தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தபோதும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், 'கட்சி தான் முக்கியம்; அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்' என நிர்மலா சொன்னாராம். ஆனால், அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.'பார்லிமென்ட் தேர்தலில் அண்ணாமலையால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உடைந்தது' என்பது மத்திய பா.ஜ., தலைவர்களின் எண்ணம். இதனால் தான், சமீபத்தில் அமித் ஷா தமிழகம் வந்தபோது அண்ணாமலைக்கு உத்தரவிட்டாராம். அதை தொடர்ந்து, 'பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர்த்துவது பா.ஜ.,வின் லட்சியம்' என பேசினார் அண்ணாமலை. 'அப்படியிருக்க ஏன் டில்லி கூட்டத்தில் பங்கேற்கவில்லை?' என, பா.ஜ., தலைவர்கள் சந்தேகப்படுகின்றனர்.இதற்கிடையே இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 'அ.தி.மு.க.,வினர் ஒன்றிணைய வேண்டும்' என செங்கோட்டையன் பேசியுள்ளார். இன்னொரு பக்கம் தினகரன், பா.ஜ., - -அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகியுள்ளார். அவரும், 'அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும்' என சொல்லி வருகிறார்.ஓராண்டிற்கும் மேலாகவே, 'அ.தி.மு.க., ஒன்றாக இருக்க வேண்டும்; கட்சியிலிருந்து வெளியேறிய தலைவர்கள் இணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும்' என, பல முயற்சிகளை எடுத்தவர் அமித் ஷா.எனவே, செங்கோட்டையன் மற்றும் தினகரன் விவகாரங்களுக்கு காரணம் உள்துறை அமைச்சரா? 'பழனிசாமி மீது நெருக்கடியை ஏற்படுத்தி, பன்னீர்செல்வம் உட்பட அனைவரையும் அ.தி.மு.க.,வில் இணைக்க அமித் ஷா முயற்சிக்கிறாரா' என்கிற சந்தேகமும், டில்லி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 09:49

அண்ணாமலை பிடிவாதத்தால் மத்தியில் அமைந்த இந்த பிஜேபி ஆட்சியில் தமிழ்நாட்டு பங்கு இருந்திருக்கும் அதை ஆந்திராவுக்கு பிஹாரும் தட்டி சென்று விட்டது. அது அண்ணாமலைக்கு புரியவில்லை தனக்கு முக்கியத்துவம் வேணும் என்கிற கொள்கையில் மூத்தவர் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை


Anantharaman Srinivasan
செப் 08, 2025 18:30

அதிமுக பாஜக கூட்டு கழுதை தேய்ந்து கட்டெறுப்பு ஆன கதை தான்... தேர்தலுக்கு பின் உன்னாலே நான் கெட்டேன்.. என என்று மாறிமாறி புலம்ப போகிறார்கள்.


Arul Narayanan
செப் 08, 2025 09:04

அண்ணாமலை நீக்கம் ஒரு நாடகம். தேர்தல் முடிந்த பின் அமித் ஷா தன் வேலையை காட்டுவார்.


Manoharan
செப் 08, 2025 07:06

அமித்ஷா அவர்கள் உடனே பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


kamal 00
செப் 07, 2025 19:49

அண்ணாமலையாரே எங்கள் நம்பிக்கை.வேற எந்த திராவிட மங்கிகளிடமும் நேர்மை இல்லை


Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 09:51

தங்களிடம் உள்ளதா ரெஜிஸ்டரேஷன் பீஸ் 40 லட்சம்


ராஜா
செப் 07, 2025 19:28

நாலு கோடி போய் நாற்காலி வந்ததை நினைத்து சிரிப்பு வருது, வடக்கன்ஸ் தலை கீழாக நின்றாலும் இசை என்ன வாசித்தாலும் ஒரு போதும் அது நடக்காது


SP
செப் 07, 2025 18:06

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை முதலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி அண்ணாமலை அவர்களின் தலைமையில் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும். கண்டிப்பாக அதற்கு பலன் உண்டு.தேவை இல்லாமல் எடப்பாடியாருக்காக மானங்கெட்டு போய் தேர்தல் வேலை பார்க்க முடியாது.திமுக வரக்கூடாது என்பதற்காக எடப்பாடி அதற்கு சரியான தீர்வு அல்ல.


Manoharan
செப் 08, 2025 07:08

சரியான கருத்து


pakalavan
செப் 07, 2025 15:56

காட்டிகுடுக்கும் துரோகி எடப்பாடி, கட்சியை அடகு வைச்சிட்டார்


Mahendran Puru
செப் 07, 2025 14:58

நம்ம கையில ஈடி கீது சிபிஐ கீது. அப்புறம் என்ன, ஒரு எப் ஐ ஆர் ஒரு ரெய்டு. பழனிசாமி சரண்டர். ஆனால் ஓட்டுக்குத்தான் ஓட்டர் லிஸ்ட் கையில இருக்கு. ஞானேஷ்வர் இருக்காரு.


kamal 00
செப் 07, 2025 19:50

பணம், சினிமா மீடியா இருக்கு.... அதான் இந்த ஆட்டம் போடறானுக


Vijay D Ratnam
செப் 07, 2025 14:07

எடப்பாடி பழனிசாமி அவர்களே, கவனமாக இருங்கள். காலை சுற்றிய பாம்பு கடிக்காம விடாது. விஷ முறிவு மருந்துகளை உடன் வைத்துக்கொள்ளுங்கள். மெல்ல விலக்கி மண்டையில் ஒரே போடாக போட்டு புதைத்து அல்லது எரித்து விடுங்கள். இந்த பாம்பு உங்கள் காலை சுற்றிக்கொண்டு இருக்கும் வரை மைனாரிட்டி முயல்கள் நீங்கள் இருக்கும் திசை பக்கமே வராது. சொம்மா ராகுல் காந்தியோட, விஜய்யோட அகில்இந்திய முஸ்லீம் லீக் தலைவரோட ஒரு சந்திப்பது போடுங்கள். வால சுருட்டிக்கிட்டு ஒழுங்கா இருக்கணும்னு உலகப்பணக்காரர்களின் வரிசையில் வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும் ஜெய்ஷாவின் தந்தைக்கு உணர்த்துங்கள். அதிமுக + காங்கிரஸ் + விஜய் + விசிக கூட்டணி அமைத்தால் 220/234 வெற்றி உறுதி.


BALAMURUGAN G
செப் 07, 2025 14:52

ஓங்கோலார் குடும்ப வாரிசுகளின் அடுத்த தலைமுறையான இன்பாவிற்குக் கொடித் தூக்கி ஜென்ம சாபல்யம் அடையலாம்


Natchimuthu Chithiraisamy
செப் 13, 2025 09:56

பிஜேபி அண்ணாமலை நான் 40 லட்சம் ரெஜிஸ்டரேஷன் பீஸ் கட்டி உள்ளேன் அது என் சம்பாதித்த பணம் என்று சொல்லி 20 கோடிக்கு மேலான சொத்தை வெயிடுவது எடப்பாடி தோற்பதற்க்கான வாய்ப்பை ஏற்படுத்த திமுகவுக்கு மறைமுக ஆதரவு