உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

மெட்ரோ நிலையத்தில் தி.மு.க., ஹிந்தி திணிப்பு

சென்னை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டது. பின், கடும் எதிர்ப்பால், அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், இருந்த ஹிந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரம், தமிழக அரசிடம் தான் உள்ளது. எனவே, ஹிந்தி எழுத்துகள் இடம் பெற்றது குறித்து, தி.மு.க., அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்கள், ஹிந்தியை திணித்தால், அதற்கு எதிராக ஆவேசமாக முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவரது அரசின் ஹிந்தி திணிப்பை கண்டும் காணாமலும் அமைதியாக இருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஹிந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

K V Ramadoss
ஜூலை 23, 2025 15:16

ரயில் நிலைய பலகையில் ஹிந்தியிலும் பெயர் இருந்தால் அது திணிப்பா? அங்கு ஹிந்தி இருந்தால் அது உங்கள் வாயில் திணித்ததாகுமா? என்ன முட்டாள்தனமான LOGIC? இங்கு நான் ஆங்கிலத்தில் எழுதினால் அது உங்கள் வாயில் ஆங்கிலத்தை திணித்ததாகுமா? தானும் குழம்பி மக்களையும் குழப்பும் இந்த கடிதம் எந்த விதத்தில் நன்மை அளிக்கப்போகிறது?


R.Varadarajan
ஜூலை 22, 2025 21:39

எந்த மொழி பேசுபவரானாலும் இந்த அளவுற்கு மொழி வெறி தேவையா? பல மொழிகள் கற்பதனால் குடியா மூழ்கிவிடும்?


Ramesh Sargam
ஜூலை 22, 2025 19:40

இந்த டிஎம்கே ஆட்கள், ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வரும் அரிசி , கோதுமை, மருந்துகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்களை ஹிந்தி எதிர்ப்பு என்று கூறி வாங்காமல் இருப்பார்களா? வாங்காமல் இருக்கத்தான் முடியுமா? சென்னையில் இன்று ஒரு சிறிய ஹோட்டல் முதல் பல தொழில்கூடங்களில் 90 சதவிகிதம் ஹிந்தி பேசுபவர்கள்தான். இன்னும் சில வருடங்களில் இங்குள்ள மக்களுக்கு ஹிந்தி மொழி தெரியாவிட்டால் வாழ்க்கையே கஷ்டம்தான்.


Indian
ஜூலை 22, 2025 08:57

என்ன ஒரு நடிப்பு ..


Kumar Kumzi
ஜூலை 22, 2025 00:24

ரயிலில் திருட்டுத்தனமாக வந்த குடும்பத்தை தமிழ் நாட்டிலிருந்து துரதியடிக்கப்பட வேண்டும்


C.SRIRAM
ஜூலை 21, 2025 21:50

இதை ஒரு பிரச்சனையாக எடுத்தவர்களை தேசத்துக்கு தண்டம் என்கிற வகையில் பெரும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் . தமிழ், ஆங்கிலம் பின்னர் தான் ஹிந்தி . இதில் என்ன தவறு . இம்மாதிரி ஆட்கள் தண்டம் . பூமிக்கு பாரம் மட்டுமே


R. SUKUMAR CHEZHIAN
ஜூலை 21, 2025 19:35

இரயில் நிலையத்தில் இந்தி எழுத்து இருந்தால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் என்ன நஷ்டம் ஏற்ப்பட்டு விட்டது? மொழி அரசியல் மிகவும் தரம் தாழ்ந்த செயல், நாம் AI தொழில் நுட்ப காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி மிக தொன்மையான மற்றும் பலம்வாய்ந்த மொழி இதை எந்த மொழியாலும் அழிக்க முடியாது.


xyzabc
ஜூலை 21, 2025 16:44

இந்த அன்புமணி ஒரு காலத்துல மத்திய அமைச்சராக இருந்தவர்.


Padmanabhan, Mylapore
ஜூலை 21, 2025 16:34

Dinamalar, feel happy what we need to happen is happening. You should not publish this news. Good if dmk supports bjp in this. Such need article will spoil our agenda by we our self instigating people to agitate against this.


RAMESH
ஜூலை 21, 2025 16:04

தமிழா தமிழா...சன் ஷைன் பள்ளியில் சென்று பார்.... தமிழ் மொழியின் அருமை தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை