உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எலியை போல அமைதியாக இருக்காதீங்க: ஊடகங்களை சாடிய காங்., ராகுல்

எலியை போல அமைதியாக இருக்காதீங்க: ஊடகங்களை சாடிய காங்., ராகுல்

- நமது சிறப்பு நிருபர் - ''ஊடகங்கள் எலியை போல அமைதியாக இருக்கக்கூடாது,'' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார். டில்லியில் உள்ள பார்லி., வளாகத்தின் மகர் துவார் பகுதியில், நிருபர்களை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, நிருபர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். கோபமடைந்த ராகுல், ''என்னிடம் குறுக்கிட்டு கேள்வி கேட்ட மாதிரி, ஆளுங்கட்சியினரிடம் உங்களால் கேட்க முடியுமா?'' என, கேள்வி எழுப்பினார். அந்த நிருபர் மீண்டும் கேள்வி எழுப்பிய போது, ''என்னிடம் மட்டுமே குறுக்கீடு செய்கிறீர்கள். 24 மணி நேரமும் குறுக்கிடுகிறீர்கள். ஆனால், ஆளுங்கட்சியினரிடம் கேள்வியும் கேட்பதில்லை; குறுக்கீடும் செய்வதில்லை. ''பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ஊடகங்கள் ஒருபோதும் குறுக்கிடுவதில்லை. ''என்னிடம் மட்டும் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? அமித் ஷாவிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? அனைத்து ஊடகங்களும் ஏன் சுண்டெலியை போல மவுனம் காக்கின்றன?'' என, ராகுல் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதேபோல், பார்லி.,க்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்., லோக்சபா எம்.பி., பிரியங்கா, ''ஊடகங்கள் மவுனமாக இருப்பதை போல நாங்களும் இருக்க வேண்டுமா? ''மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தில் மத்திய அரசை பொறுப்புக்கூற செய்வதற்கு பதில், பார்லி., முடக்கம் குறித்து எதிர்க்கட்சிகளை மட்டுமே ஊடகங்கள் கேள்வி கேட்பது ஏன்?'' என, கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

விருமாண்டி, Benaras
ஆக 13, 2026 20:31

ஊடகங்களை சாடும் அளவிற்கு இவரின் தரம் உயர்ந்து விட்டதா இல்லை ஊடகங்களின் தரம் இவர் சாடும் அளவிற்கு தாழ்ந்து விட்டதா?


சொரிமாண்டி
ஆக 13, 2026 23:16

விருமாண்டி நீ சொல்றது உனக்கு புரிஞ்சா சரி...


Barakat Ali
ஆக 13, 2026 18:57

அனைத்து ஊடகங்களும் பாஜக ஆதரவு ஊடகங்கள் அல்ல ....


jss
ஆக 13, 2026 18:12

இது எலி அல்ல பெருச்சாளி. பெருச்சாளி வளை தோண்டி வயல்களையும் வீடுகளையும் கொடுத்து விடும் இந்த பெருச்சாளி நாட்டையும் நாட்டு மக்களையோம் கொடுத்து விடும். தடியால் அடித்து விரட்ட வேண்டும். இது தலை தெறிக்க ஓடுயாதா என்று பார்த்து நிம்மதி யடைய வேண்டும்


ellar
ஆக 13, 2026 16:02

எலி அமைதியாக இருக்குமா என்று கூட தெரியாது இந்த பணக்கார குழந்தைகளை என்ன செய்வது எப்படியோ டெல்லியில் என்ன நடந்தாலும் உடனடியாக பார்லிமென்டை முடக்குகிறீர்களே நாடு முழுவதும் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கிற பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு ஏன் ஒரு சட்டசபையோ அல்லது ஒரு மாநகராட்சி கூட்டமோ முடக்கப்படவில்லை உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?


பைரவன்
ஆக 13, 2026 15:20

காங்கிரஸ் கட்சியிலேயே மற்ற தலைவர்கள் யாரும் காந்தி குடும்பத்தைக் கேள்வி கேட்க முடியாது. காங்கிரஸ் கட்சி அடிமைகளின் கூடாரம். மிகச்சிறப்பாக ஆட்சி நடத்திய நரசிம்ம ராவை நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்று இந்த நாடறியும். இந்திய மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், காந்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலக வேண்டும். நீங்கள் தயாரா?


சத்யநாராயணன்
ஆக 13, 2026 14:55

ராகுல் காந்தி இவர் பாராளுமன்றத்தில் எதையாவது பேசத் தொடங்கினாலே இவருடைய பரம்பரை மானத்தை வாங்கி விடுகிறார்கள் அதனால் இப்படித்தான் கிடைத்தவர்களிடம் எலி புலி என்று ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்


T.S.SUDARSAN
ஆக 13, 2026 12:08

ராகுல் என்று கூறுகிறார்களே மக்கள். இப்போ புரிகிறதா.


Balasubramanian
ஆக 13, 2026 11:54

இப்படி தெளிவில்லாமல் எலி என்று பேசியதற்கு இவர் ஊடகங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! எதிர் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!


kulanthai kannan
ஆக 13, 2026 11:37

நேரு குடும்பத்தின் அதிகார வெறிக்கு அளவே இல்லை. காங்கிரஸ் கட்சி பூராவும் கொத்தடிமைகளாக இருப்பதுதான் இந்த குடும்பம் ஆட்டம் போடக் காரணம்


Balaji Vk
ஆக 13, 2026 11:02

இந்த சுயநல கோமாளிக்கு வேற வேலையே இல்லை, கொஞ்சமும் கூட தகுதி இல்லாத அரசியல்வாதி. இவன் இந்திரா ராஜிவ் போன்றோருக்கு வாரிசு ஆனதால் காங்கிரஸின் தலைவன் ஆகிவிட்டார், ஒன்றுக்கும் உதவாதவர். உண்மையிலே நம் நாடு மீது அக்கறை இருந்தால் பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படனும். தகுதி இல்லாதவரெல்லாம் நமது நாட்டின் பிரதமராக ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.


முக்கிய வீடியோ