உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் சுங்க சாவடிகளில் நிற்க வேண்டாம்

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் சுங்க சாவடிகளில் நிற்க வேண்டாம்

புதுடில்லி: சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தாமல், ஆண்டு 'பாஸ்' மற்றும் ஆயுட்கால பாஸ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முறையே, 3,000 மற்றும் 30,-000 ரூபாயை கட்டணமாக நிர்ணயிக்க ஆலோசிக்கப்படுகிறது.

பிரச்னை

தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி பயன்படுத்தும் தனியார் கார்களுக்கு, சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருப்பது ஒரு பெரும் பிரச்னையாகவே உள்ளது. நீண்ட நேரம் காத்திருப்பதுடன், அதிக அளவில் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன.தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில், மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடியை அடிக்கடி கடக்கும் வாகனங்கள், மாதத்துக்கு, 340 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.இதற்கு தங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல, சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு, ஆண்டு பாஸ் மற்றும் ஆயுட்கால பாஸ் வழங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருகிறது.இதன்படி, ஆண்டு பாஸ் கட்டணமாக, 3,000 ரூபாய் நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

எதிர்பார்ப்பு

தற்போது மாதாந்திர பாஸ் வைத்துள்ளோர், ஆண்டுக்கு, 4,080 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. மேலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.அதுபோல, 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஆயுட்கால பாஸ் கட்டணமாக, 30,000 ரூபாய் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இறுதி கட்ட ஆலோசனைகள் நடந்து வருவதால், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

hari
பிப் 07, 2025 20:05

currently monthly pass is offered for the near by toll plaza for the residents within 5 km. if this is same ok but if it is for across India then most welcome.


தேவராஜன்
பிப் 07, 2025 14:18

நல்ல முடிவு. வரவேற்கத்தக்க முடிவு. திருடர்கள் முன்னேற்ற கலக கொடியை வாகனத்தில் கட்டினாலும் அந்த தொகையைக் கட்ட வேண்டுமா?


N Sasikumar Yadhav
பிப் 07, 2025 13:21

ஒருசில முரசொலி வாசகர்களுக்கு இந்த 3000 ரூபாயில் ஒரு வருடத்துக்கு பாரதம் முழுக்க பயணிக்கலாமென்பது தெரிய வாய்ப்பில்லை அதனால்தான் இப்படி கோபாலபுர கொத்தடிமைகள் மாதிரி பொறுமுகிறார்கள்


Shunmugham Selavali
பிப் 07, 2025 11:34

இந்த கட்டணம் ஒரு சுங்கச்சாவடிக்கு மட்டும். சரியா? அப்படியாணால் வங்கியில் கடன் வாங்கிதான் பாஸ் வாங்கமுடியும்.


Saamaanyan
பிப் 07, 2025 08:00

உள்ளபடியே நல்ல முடிவு ....வரவேற்கிறேன்


Saamaanyan
பிப் 07, 2025 07:58

சாலை வரி மொத்தமாக புதிய வாகனம் விற்கும்போதே வாங்குவது போல இதையும் செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது


அப்பாவி
பிப் 07, 2025 07:36

ஏன்? வண்டி விக்கிம் போதே சுங்கமாக 3000 உருவிடுங்களேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை