உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முற்கால பல்லவ மன்னர் செப்பேடு கர்நாடகாவில் கண்டெடுப்பு

முற்கால பல்லவ மன்னர் செப்பேடு கர்நாடகாவில் கண்டெடுப்பு

முற்கால பல்லவ மன்னனான சிவசிம்மவர்மன், பிராமணர்களுக்கு ஒரு கிராமத்தை தானம் அளித்ததற்கு ஆதாரமான செப்பேடு, கர்நாடக மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் பல்லவர்கள். கடல் வணிகம், கலைகள், போர்களில் வல்லவர்கள். இவர்களுக்கும், கர்நாடக பகுதியை ஆண்ட சாளுக்கியருக்கும் இடையே, அடிக்கடி போர்கள் நடந்தன. வாதாபியை ஆண்ட, இரண்டாம் புலிகேசியை வீழ்த்தி, முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தன் வெற்றியை பதிவு செய்தார். முற்கால பல்லவ மன்னரான சிவசிம்மவர்மன், அப்போதைய மேலை சாளுக்கிய நாடான, கர்நாடகா வரை போர் தொடுத்து சென்றதும், அங்குள்ள கிராமங்களை, பிராமணர்களுக்கு தானமாக வழங்கும் அளவுக்கு, ஆட்சியில் செல்வாக்குடன் இருந்ததும், தற்போது கிடைத்துள்ள செப்பேட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது. அவர் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்திருக்கலாம் என, வரலாற்று ஆய்வாளர்கள் கருதி வந்த நிலையில், அவரின் 20ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட செப்பேடு கிடைத்துள்ளது.இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின் மைசூரு கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: நாட்டில் தனியார் வசம் உள்ள, வரலாற்று சிறப்பு மிக்க தொல்பொருட்களை, மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, பதிவு செய்யும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில், கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டம், திப்பூரு கிராமத்தைச் சேர்ந்த, பண்டிட் சிவஸ்வாமி ஆச்சார்யா என்பவரிடம் இருந்த, ஐந்து ஏடுகளுடன் கூடிய செப்பேடு தொகுதியை, ஸ்ரீ சத்ய சாய் பல்கலையின் வரலாற்றுத் துறை பேராசிரியர் யாதவா ரகு கொண்டு வந்தார். ஐந்து - ஆறாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருதம் மற்றும் துவக்க கால தெலுங்கு, கன்னட எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த செப்பேடுகளை ஆராய்ந்தோம். அதில், ஸ்கந்தவர்மாவின் பேரனும், நந்திவர்மாவின் மகனுமான விஜய சிவசிம்மவர்மன், போர் சூழலுக்கு பிறகு, தன் 20வது ஆட்சியாண்டில் போகூருக்கு வந்த நிலையில், அங்கு அனைத்து வேதங்களையும் கற்றறிந்த பிராமண விற்பன்னரான ஜேஷ்டசர்மா என்பவருக்கு, கோரிகுண்டா விசாயாவில் உள்ள சீயபுரா என்ற கிராமத்தை தானமாக வழங்கிய தகவல் உள்ளது. கார்த்திகை மாதம், பவுர்ணமிக்கு முந்தைய 12வது நாளில் இந்த தானம் வழங்கப்பட்டதாக தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SS
ஜன 21, 2025 06:11

மன்னர்கள் மக்களை ஆண்டுள்ளனர். ஆனால் அந்த மன்னர்களை பிராமணர்கள் ஆண்டுள்ளனர் என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. பல்லவர்கள் காலம் தொடங்கி சேர சோழ பாண்டிய மற்றும் நாயக்கர் ஆட்சி வரை இந்த ஆதிக்கம் நீடித்துள்ளது.பிற்படுத்த பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்த மன்னராட்சிகள் எதுவும் செய்திடவில்லை.


N Sasikumar Yadhav
ஜன 21, 2025 07:11

திருட்டு திராவிட களவானிங்க மாதிரி ஓட்டுப்பிச்சைக்காக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட என பிரிவினை பேசாமல் சமமாக செய்திருப்பார்கள். சிறுபான்மையிரனரின் ஓட்டுப்பிச்சைக்காக பிராமணர்களை தூற்றவில்லை


subramanian
ஜன 21, 2025 08:02

ஸ்ஸ் ஸ்ஸ் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு உள்ள நீங்கள் உண்மையான சரித்திரம் படிக்க வேண்டும். இன்று நீங்கள் சொல்லும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அன்று அரசர்கள், பாளையக்காரர்கள், சிற்றரசர்கள். எஸ் டி எஸ் சி என்று நீங்கள் சொல்பவர்கள் ராஜ்யம் ஆண்டவர்கள். அவர்கள் தான் பிராமணர்களுக்கு மனமார்ந்த தானம் வழங்கி உள்ளார்கள். அரசனை யாரும் ஏமாற்றி வாங்க முடியாது .


Anonymous
ஜன 21, 2025 15:41

அப்படி பிராமணர்கள் அன்று மன்னனை ஆண்டு கொண்டிருந்தால், இன்றைய தேதியில் , அன்று மன்னர்களால் கிராமம் கிராமமாக, நிலங்களை தானம் பெற்ற பிராமணர்கள், அவர்களின் வம்சாவளியினர் இன்று நாட்டிலேயே, மிகுந்த செல்வம் படைத்தவர்களாக, பெரும் பணக்காரர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இன்றைய இந்தியாவில், இட ஒதுக்கீடும் இல்லாமல், மேற்படிப்பு படிக்க வசதியும் இல்லாமல் இருக்கும் சாதாரண நடுத்தர மக்களாக தான் அதிக பட்ச பிராமணர்கள் இருக்கிறார்கள், கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து , பிறகு கருத்து பதிவு இடவும்.


புதிய வீடியோ