உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னை; முதல்வர் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்திலும் கப்சிப்

தமிழக பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னை; முதல்வர் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்திலும் கப்சிப்

'தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் கல்விசார்ந்த ஆலோசனைகள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், பல்கலைகளின் நிதி, நிர்வாகம் சார்ந்த முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை' என பேராசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, பல்கலைகளின் வேந்தர் அதிகாரம் தற்போது முதல்வர் வசம் வந்து விட்டது என தி.மு.க.,வினர் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4se6fpkd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஏமாற்றம்

இந்நிலையில், அனைத்து பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கான கூட்டத்தை முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடத்தினார். பல்கலைகளில் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கெல்லாம் முதல்வர் நடத்திய கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்ற துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், 'கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துக்களை மட்டுமே போதிக்க வேண்டும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பி விடக்கூடாது' என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், தற்போதைய முக்கிய தேவையான பல்கலைகளின் நிர்வாக ரீதியான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 21 அரசு பல்கலைகளில் காமராஜ், திருவள்ளுவர், பாரதிதாசன், அண்ணா உட்பட எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளன. பெரியார் பல்கலையில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்தும் பதவி நீட்டிப்பில் தொடர்கிறது.இதுபோல் பெரும்பாலான பல்கலைகளில் நோடல் பதவிகளான பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் காலியாக உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் இப்பதவிகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இதுதவிர, 10 ஆண்டுகளுக்கும் ஆசிரியர், அலுவலர்கள் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்கள் பல்கலைகளில் நிரப்பப்படவில்லை. 80 சதவீதம் வரை தொகுப்பூதியத்தில் தான் பணிபுரிகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னடைவு பணியிடங்களும் காலியாக உள்ளன. ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான பதவி உயர்வு கிடப்பில் போடப்பட்டுஉள்ளன.

நிதிச்சுமை

குறிப்பாக மதுரை காமராஜ் பல்கலை தொடர்ந்து நிதிச்சுமையில் பாதிக்கப்பட்டு, சம்பளம் வழங்குவது சவாலாகி வருகிறது. இப்பல்கலைக்கு 150 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்கலைகள் நிதிசார் பிரச்னைகளில் தள்ளாடுகின்றன.ஓய்வூதியப் பலன்களை கூட வழங்க முடியாத நிலைக்கு பல்கலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவைபோன்ற பிரச்னைகள் விவாதிக்கப்பட்டிருந்தால், உயர்கல்வி நிலை எந்த நிலையில் உள்ளது என முதல்வருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது ஏமாற்றத்தை தந்துள்ளது. இவ்வாறு பேராசிரியர்கள் கூறினர்.

தமிழக அரசு தயக்கமா?

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழங்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு நடந்து கவர்னர் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற தயக்கம் காரணமாக கூட பல்கலைகளின் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளை முதல்வர் பேசாமல் தவிர்த்து இருக்கலாம் என, பேராசிரியர்கள் கருதுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Manjunathan
ஏப் 18, 2025 16:45

பல்கலைக்கழகத்தில் துண்டு சீட்டு வைத்துக்கொண்டு பேச அங்கு ஒன்றுமே இல்லை


ராமகிருஷ்ணன்
ஏப் 18, 2025 14:51

நிதி நிர்வாகம் பற்றி எப்படி பேச முடியும் உள்ள நிதிகள் சுருட்டவே போதல்லே. அதனால எப்ப பார்த்தாலும் காசு கொடு காசு கொடு காசு கொடு என்று கேட்டுகிட்டே இருக்கோம், இதுக்கும் காசு கேப்போம்,


Sridhar
ஏப் 18, 2025 12:48

இந்த ஆளுக்கு பல்கலைக்கழகங்களோட பிரச்சனைகளை பத்தி என்ன கவலை? அவரு போனதே எத்தனை துணைவேந்தர், எத்தனை ரிஜிஸ்ட்ரார் மற்றும் பேராசிரியர்கள் அமர்த்தப்படவேண்டும், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ரேட் ங்கற விசயத்தை தெரிஞ்சிக்கிறதுக்குத்தானே திருட்டு கும்பல் என்னைக்கு நிர்வாக பிரச்சனைகள் பத்தி பேசியிருக்கு? நாலு வார்த்தையை கோர்வையா பேசத்தெரியாத இந்த ஆளெல்லாம் "வேந்தர்" னு வந்து ஒக்காந்தா, எல்லா பல்கலைக்கழகங்களும் வெஃகி தலைகுனியனுமே? சீக்கிரமே தீர்ப்பை மாத்தி கேடுகெட்ட நிலையிலிருந்து அவங்கள காப்பாத்தணும். ஏற்கனவே நிதி இல்லேங்கறாங்க. இனிமே யுஜிசி வேற பணம் கொடுக்காது. பாவம் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு கேவலமான ஆட்சி நடந்தா எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியிருக்கிறது?


kannan sundaresan
ஏப் 18, 2025 10:48

முதல்வரே, புத்தகம் எடுக்கவேண்டிய கையில் அருவாள் கஞ்சா டாஸ்மாக் சரக்கு பல்கலை வளாகத்திற்குள் பெண்களுக்கு பாலியல் கொடுமை உயர்கல்வி அமைச்சரே பெண்களை கேவலமாக பேசுகிறார். இதையெல்லாம் உங்களால் கட்டுப்படுத்து முடியுமான்னு சொல்லுங்க?


ManiK
ஏப் 18, 2025 10:40

பல்கலை கழகம் இப்போது திமு கழகம் ஆகிவிட்டது. ஆய்வு செய்ய இவருக்கு எதாவது தகுதி இருப்பதாக தெரியவில்லை. தமிழக மாணவர்கள் நல்ல உண்மையான கல்வியை தேடி கும்மிடிபூண்டி தாண்டவேண்டியது தான் ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை