உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கொடுப்பதோ 70,000 டோக்கன்; பதிவாவதோ 11,000 பத்திரங்கள்: பதிவு குறைவால் அதிகாரிகள் கவலை

கொடுப்பதோ 70,000 டோக்கன்; பதிவாவதோ 11,000 பத்திரங்கள்: பதிவு குறைவால் அதிகாரிகள் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சார் -- பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் டோக்கன்களில், பாதிக்கும் குறைவாகவே பத்திரங்கள் பதிவாவது, உயரதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, பதிவுத்துறை வருவாய் பிரதானமாக உள்ளதால், அவற்றை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிவுத்துறை பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேர் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி, சொத்து பரிமாற்றத்திற்கான அனைத்து விபரங்களையும், ஆன்லைன் வாயிலாக உள்ளீடு செய்ய வேண்டும்; அதனடிப்படையில், கட்டணம் தெரிவிக்கப்படும். இந்த பணிகள் முடிந்தால் தான், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி டோக்கன் தரப்படுகிறது. அரைகுறை விபரங்கள் அளித்தால் டோக்கன் கிடைக்காது. இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவுக்கேற்ப தினமும் 120 முதல் 300 டோக்கன்கள் என, மாநிலம் முழுதும் 70,000 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன்களின் ஆயுள் காலம் அன்றே முடிந்து விடும். தமிழகத்தில் 2023 - 24ம் நிதியாண்டில், 33.22 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. இதன்படி, தினமும் 11,000 பத்திரங்கள் பதிவானது தெரிகிறது.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு சராசரியாக, 70,000 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் பத்திரத்தில் குறைபாடு போன்றவற்றால், 20 சதவீத பத்திரங்கள் பதிவாகாமல் போகலாம். குறைந்தபட்சம், 60 சதவீதமாவது பதிவாக வேண்டும். ஆனால், டோக்கன்களில் பாதியை கூட எட்ட முடியாதது ஏன் என்று தெரியவில்லை. பெரும்பாலான இடங்களில் பதிவுக்கு பத்திரங்கள் தகுதியாக இருந்தாலும், வாய்மொழியாக கூடுதல் விபரம் கேட்டு, திருப்பி அனுப்புவதாக புகார்கள் வருகின்றன. சார் - பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை, நேரலையில் ஆய்வு செய்ய வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, பத்திரங்கள் குறைவதற்கான காரணங்களை துல்லியமாக ஆராய்ந்தால், பத்திரப்பதிவு எண்ணிக்கை யும், வருவாயும் இரு மடங்காக உயரும். இவ்வாறு அவர் கூறினார் -- நமது நிருபர் --.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Muthu Kumar
செப் 29, 2024 07:23

If we apply to dtcp approval .they are keeping pending lot of years. Then we have to go to dtcp office daily. to pray them. Eventhough they are not move the file to next stage. Then how can we do the registration. Govt officers only know the way.they are not move just one file.


elumalai chinnasamy
செப் 29, 2024 06:47

பத்திரப்பதிவுக்கு சென்றால் இது நடப்பது உண்மைதான். நானும் இதில் சிக்கியுள்ளேன் என்னுடைய இடத்தை பதிவு செய்யாமல் கடந்த 2 மாதங்களாகவே இருந்து வருகிறேன். காரணம் புதிய சப் டிவிஷன் நம்பரை பதிவு செய்ய ''காணப்படவில்லை'' என்ற வழிமுறை ஆன்லைனில் வரவில்லை. இது எப்போது வரும் என்று தெரியவில்லை என்கிறார் சார் பதிவாளர். இதுவரை இந்த வழிமுறை வரவில்லை. டிடி மற்றும் பத்திரம் எழுதியும் அப்படியே வைத்துக்கொண்டுள்ளேன். இந்த பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பிரச்சனையில் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


Ramachandran
செப் 23, 2024 19:01

கிராமப்புறங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கணினிகள் காலையில் 2 மணி நேரம்தான் வேலை செய்கின்றன. பின்னர் வேகம் மிகவும் குறைகிறது. எனவே பதிவுகள் நடப்பதில்லை. பதிவுக்கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. ஊழலும் அதிகப்படி கட்டணமும் தலை தூக்கி உள்ளன. பத்திரப்பதிவு அலுவலங்களில் இடப்பற்றாக்குறை. பதிய வருவோருக்கு வசதிகள் இல்லை. தூய்மையான கழிப்பிடம், குடி நீர் வசதி கிடையாது.


Joe Rathinam
செப் 23, 2024 17:22

எல்லா பாத்திரங்களும் டீமேட் பண்ணவேண்டும் அப்போதுதான் போலி பத்திர பதிவை தடுக்க முடியும். பத்திர பதிவு அலுவலகத்திற்கு வராமலே உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யமுடியும்.


Kanns
செப் 23, 2024 10:29

Main Reasons for Decrease in Real Estate & Registration are Aadhar-PAN and Excess ChargesTaxes-HiLooting Stamp Charges Without Providing Any Services HiInflated Guideline Values for StampLoots, IT-WealthTax Dvlpmnt Charges& PlanApproval Loots Without Services. Only Fools Rich & Foreigners InvestIndians Sabotaged. SHAME


முக்கிய வீடியோ