வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆசிரியர்கள் நிலைமை யை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில், நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற, 34,000 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் விதி 110 ன் கீழ், 2026க்குள், 19,260 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, 2021ல் அறிவித்தார். ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதைக் கண்டித்து, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற, பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் நுாதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை, சாலையில் வீசினர். கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, கையில் தட்டேந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆசிரியர்கள் நிலைமை யை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்