உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வியர்வையை துடைத்தேன்; திருநீறை அல்ல திருமாவளவன் விளக்கம்

வியர்வையை துடைத்தேன்; திருநீறை அல்ல திருமாவளவன் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஒரு மணி நேரமாக என் நெற்றியில் திருநீறு இருந்தது. நெற்றி வியர்வையை தான் துடைத்தேன்; திருநீறை துடைக்கவில்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

மதுரையில் முருக பக்தர்கள் என்ற பெயரில், மோடி பக்தர்கள் மாநாடு தான் நடந்தது. அதை ஹிந்துக்கள் மாநாடு என தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். திருப்பரங்குன்றத்துக்கு நான் சென்று இருந்தேன். அரசு அலுவலராக மதுரையில் பணியாற்றியபோது, 30 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்குச் சென்றேன். தற்போது, அக்கோவிலுக்கு செல்ல ஆர்வம் எழுந்தது; சென்றேன்.அங்கு கோவில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. எனவே, கருவறையில் உள்ள முருகனை பார்க்க முடியவில்லை. வெளியே ஓரிடத்தில் ஏற்பாடு செய்திருந்த முருகனை வழிபாடு செய்தேன். பூஜை செய்து திருநீறு பூசினர்; கழுத்தில் மாலை அணிவித்தனர்; தலையில் பரிவட்டம் கட்டினர்.உடன் வந்த அனைவரும் முருகனை தரிசித்தோம். ஒரு மணி நேரம் கோவிலில் இருந்தோம். ஏராளமானோர் மற்றும் துாய்மை பணியாளர்கள், என்னுடன் படம் எடுத்து கொண்டனர்.எல்லாம் முடிந்து வாசலுக்கு வந்தபோது, திருமண தம்பதி, 'செல்பி' எடுக்க ஆசைப்பட்டனர். நானே வாங்கி செல்பி எடுத்தேன். அப்போது, நெற்றியை துடைத்தேன். அது வழக்கமான ஒன்று. திருநீறை பார்த்து துடைக்கவில்லை. வியர்த்திருக்கும் துடைத்திருப்பேன். இதுபோன்று நெற்றியை துடைப்பது வழக்கமான ஒன்று. எந்த உள்நோக்கமும் இல்லாமல் நெற்றியை துடைத்தேன்.ஒரு மணி நேரம் நெற்றியில் திருநீறு வைத்திருந்த நான், வண்டியில் ஏறும்போது துடைத்தேன் என்றால், அது எப்படி ஹிந்துக்களை அவமதித்ததாகவும், மனதை புண்படுத்தியதாகவும் ஆகும்? திருநீறு வைப்பதில் உடன்பாடு இல்லை என்றால், வைக்கும்போது தவிர்த்திருக்க முடியும்; கையில் வாங்கியிருக்க முடியும். கருவறையில் பூஜை செய்வோர், சில இடங்களில் திருநீறை அள்ளி கையில் போடுவர். சில இடங்களில் தான் நெற்றியில் பூசி விடுவர். நான் கையை நீட்டியிருந்தால் கையில் கொடுத்திருப்பர். எந்த கோவிலிலும் நான் அப்படி செய்யவில்லை. சில இடங்களில் பூஜை பொருட்களை வாங்கி, கற்பூரம் ஏற்றி, நானும் பூஜை செய்வேன்.இதில் எனக்கு ஆர்வம் உண்டு. புண்ணியம் கிடைப்பதற்காக திருநீறு பூசுவது இல்லை. அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.நானே பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். தமிழகம் ஏதோ ஒரு திசைக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை காப்பாற்றப்பட்டு வந்த சமூகநீதி அரசியல் சிதைந்து போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பணம் பத்தும் செய்யும்
ஜூன் 24, 2025 23:06

இது வரை அரசியல் அசிங்கமாகவே இருந்த இவர் இப்போது முழுமையாக மனிதர்களின் அசிங்கமாகவே மாறி விட்டார்.


theruvasagan
ஜூன் 24, 2025 22:30

கோயிலுக்கு போனேன். ஒரு மணி நேரம் இருந்து தரிசனம் செய்தேன். விபூதி இட்டுக் கொண்டேன். கோயி்லில் கற்பூரம் எல்லாம் ஏத்தி பூஜையும் செய்வேன். பல கோயி்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். அலகு குத்தியிருக்கேன். அங்கப்பிரதட்சிணம் பண்ணியிருக்கேன். காவடி எடுத்திருக்கேன். தேர்வடம் புடிச்சிருக்கேன். விரதம் இருந்து மண்சோறு கூட சாப்புட்டிருக்கேன். பக்திப்பழமா நெத்தியில பட்டையும் கழுத்தில கொட்டையும் போட்டு பஜனை பாட்டெல்லாம் பாடியிருக்கேன். அப்படிப்பட்ட நான் போய் நெத்தியில வச்ச திருநீரை அழிப்பேனா. அப்படிப்பட்ட பாவத்தை சத்தியமா நான் செய்யல. செய்யல. செய்யல. என்னை நம்புங்க. இப்படி புலம்பினது யார். சனாதனத்தையும் கோயிலையும் கோபுரத்தையும் சாமியையும் நாக்கில் நரம்பில்லாமல் கேவலமாக பேசின ஆசாமிக்கு முருக பக்தர் மாநாடு மூலம் மூளையே கலங்கிப்போற அளவுக்கு அடி கொடுத்து இப்படி கதறவிட்டாயே கந்தா கடம்பா கதிர்வேலா வேலாயுதா ஆறுமுகா சண்முகா முருகா உனக்கு எங்களின் கோடானு கோடி நமஸ்காரம்.


சிந்தனை
ஜூன் 24, 2025 21:43

இந்த அயோக்கியன் மாநாட்டுக்கு முன்னால் சொல்லியது:இந்த திருநீரை எவ்வளவு நேரம் வைத்துக் கொண்டிருக்க முடியும் ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று. மாநாடு முடித்தவுடன் குரல் மாறிவிட்டது வியர்வையை துடைத்தேன் திருநீரை இல்லை என்று கூறி விட்டான் நல்ல திருடன்


Ramaraj P
ஜூன் 24, 2025 14:33

இதுதான் இந்துக்கள் பலம். கதறித்தானே ஆக வேண்டும்.


Kulandai kannan
ஜூன் 24, 2025 14:09

தேசத்திற்கும் சனாதனத்திற்கும் எதிரான சக்திகள் எந்த ரூபத்தில் வந்தாலும் 2026ல் தோற்கடிக்கப் படவேண்டும்.


vijai hindu
ஜூன் 24, 2025 13:03

யாருகிட்ட காதுல பூ சுத்துறீங்க


முருகன்
ஜூன் 24, 2025 11:52

உன்மையில் துடைத்து திருநீர் தான் இவர் வேண்டும் என்றே செய்தார்


எஸ் எஸ்
ஜூன் 24, 2025 10:18

இவரை இப்படி விளக்கம் கொடுக்க வைத்தது எது? அதுதான் இந்துக்களின் எழுச்சி


yts
ஜூன் 24, 2025 08:34

இவருக்கு வியர்வை திருநீர் இடும் இடத்தில் மட்டும் தான் உள்ளது போல மனிதர்களை புகுந்தல்ல வேண்டும் சிதம்பர மக்களுக்கு இனிய ஒரு புத்தி வருமா


கண்ணன்,மேலூர்
ஜூன் 24, 2025 08:48

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலோடு இந்த கொல்ட்டி திம்மலவாளனும் மலையாளி சைமன் செபாஸ்டியான் சீமானும் ஒழிந்து விடுவான்கள் இவன்களை தமிழக மக்கள் ஒழித்துக் கட்ட தயாராகி விட்டார்கள்.


Vetrivel
ஜூன் 24, 2025 08:28

Kuruma is believing that his statement will be accepted by people of Tamilnadu. The time has changed now and the people will hereafter will not show their ears for flowers. The photo published in Dinamalar clearly shows whether he has actually wipe out the sweating or otherwise. This is the real colour of this type of third rated politician


முக்கிய வீடியோ