உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணி அமைந்தால் தி.மு.க.,விற்கு லாபம்; அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

அ.தி.மு.க. , - த.வெ.க., கூட்டணி அமைந்தால் தி.மு.க.,விற்கு லாபம்; அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

அ.தி.மு.க., அல்லது பா.ஜ., உடன், த.வெ.க., கூட்டணி அமைத்தால், தி.மு.க.,விற்கு லாபம், தனித்து போட்டியிட்டால் சிக்கல் என, அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கிய நடிகர் விஜய், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் களமிறங்கி, ஆட்சியை பிடிக்கப்போவதாக கூறி வந்தார். அதற்கேற்ப கட்சிக்கு 120 மாவட்டச் செயலர்கள், 60,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு, பூத் கமிட்டி அமைத்தார். சனிக்கிழமை தோறும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை, செப்டம்பர் மாதம் துவக்கினார். கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் விஜயையும், அவரது கட்சியினரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இச்சம்பவத்தில் இருந்து மீளாத விஜய், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில், கவனம் செலுத்தாமல் உள்ளார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, இதுவரை விஜய் சந்திக்கவில்லை. இதனால், கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை சோர்வடைந்துள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடியை பயன்படுத்தி, அவரை தங்கள் கூட்டணிக்கு இழுப்பதற்கான வேலைகளை, அ.தி.மு.க., - பா.ஜ., தலைமை துவக்கி உள்ளன. இரு கட்சிகள் தரப்பிலும், திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட பலரும், த.வெ.க., தரப்பினருடன் பேச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க., உடன் த.வெ.க., கூட்டணி அமைத்தால், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என, உளவுத்துறையினர் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்து உள்ளனர்.

இது குறித்து தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

த.வெ.க., தனித்து போட்டியிட்டால், அக்கட்சிக்கு 10 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை விரும்பாதவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஒட்டுகள் இதில் அடங்கும். சிறுபான்மையினர் ஓட்டுகளும், பட்டியலின மக்களின் ஓட்டுகளும், கணிசமான அளவு, விஜய்க்கு செல்லும். இது தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன், கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சிறுபான்மையினர் ஓட்டுகள், மொத்தமாக தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும். இது த.வெ.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ; தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும். அதேநேரம் த.வெ.க., உடன் காங்கிரஸ், வி.சி., இணைந்து ஒரு கூட்டணி உருவானாலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும் என, உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதை கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Vijay D Ratnam
அக் 22, 2025 20:38

இது உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டா அல்லது உடன்பிறப்புகள் அள்ளிவிடும் ரிப்போர்ட்டா. இப்படி ஒரு அறிக்கையை உளவுத்துறை கொடுத்திருப்பது உண்மையென்றால் உலகத்துலயே நம்பர் ஒன தற்குறி உளவுத்துறை இதுவாகத்தான் இருக்கும். இன்றைய தேதியில் அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால் 220 தொகுதிகளில் இந்த கூட்டணிக்கு வெற்றி உறுதி. குறைந்தபட்சம் திமுக கூட்டணி ஐம்பதிலிருந்து எழுபது தொகுதி வரை டெபாசிட் இழக்க நேரிடும்.


Mr Krish Tamilnadu
அக் 22, 2025 20:20

அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்பது புலி வால். ஒருமுறை அதில் ஆவேசமான பயணம் செய்ய ஆரம்பித்து விட்டால், நிச்சயம் நம்மை பதம் பார்க்கும். விலகினால், வாழ்க்கையில் நம்மை செல்லா காசாக கூட மாற்றி விடும். ஒவ்வொரு கட்சியும் சுயநலம் மிக்கது. நிச்சயம் ஆளும்கட்சி தனக்கு சாதகமாக விசயங்களை மட்டுமே செய்தியாக வெளியீடும். கூட்டணி அமைத்து விட கூடாது என்பதால் மாற்று கருத்தாக வெளியீட்டு இருக்கும். தற்போதைய எதிர் கட்சியை பொறுத்தவரை, ஒற்றை தலைமை என்ற நோக்கில் உட்கட்சி அதிருப்தி நிச்சயம் இருக்கும். அதை மாற்றி, புதிய உற்சாகம் உருவாக்க ஒர் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மற்றுமொரு எம்.ஜி.ஆர் ஆக கண்மூடித்தனமாக மக்கள் வாக்குகளை பெற தவெக வை எதிர்பார்க்கிறது. தவெக வை பொறுத்தவரை, புதிய அணுகுமுறை என்பது நமத்து போன பட்டாசு ஆக செயல்படாத அணுகுமுறையே மேலோங்கி நிற்கிறது. கொள்கையில் உறுதி என்பதை விட, மக்கள் பணி செய்வது முக்கியம். மாற்று என்றால், அதிமுக கூட்டணி 170 மற்றும் தவெக 64 என பிரித்து கொள்ளலாம். அதிமுக தவெக வின் 64 தொகுதிகளை தவெக பொறுப்பில் விட்டு விடலாம். மீதி170 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதிமுக இளைஞர்களுக்கு வழி விட்டு உள்ளோம் என கூறலாம்.. 170 தொகுதிகளிலேயே பெரும்பான்மை பெறுவோம் என கூறலாம். தவெகவும் தற்போதைய ஆளும் கட்சியை அகற்றுவது முதல் லட்சியம். தேர்தல் முடிவை பொறுத்து வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலையை எடுப்போம் என கூறலாம். கட்சி சின்னம் இன்னும் கிடைக்காததால் குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என கூறலாம்.வெளிப்படையான கூட்டணிக்கு பதில் யாரும் எதற்காகவும் மாற வேண்டாம்.


SIVA
அக் 22, 2025 19:20

நடிகர் ஜோசப் விஜய் தனியாக நின்றால் தீயமூக வாக்குகளை பிரிப்பார் , தீயமூக தோற்றாலும் மதசார்பின்மை பாசிசம் அது இது என்று காரணம் கூறி மீண்டும் பலம் பெரும் , அவர் அதிமுக பிஜேபி கூட்டணியில் இணைந்தால் விஜய் 35 முதல் 45 தொகுதிகள் வரை வெல்வார் , திமுக கூட்டணி சிதறும் , பின்னர் வழக்கம் போல மதசார்பின்மை பாசிசம் பாயசம் எதிர்ப்பு என்ற பெயரில் அவர் தலைமையில் ஒரு அணி கூட்டணி ஆட்சி என்ற பெயரில் அமைக்கலாம் ....


Muthukumaran
அக் 22, 2025 18:25

உளவுத்துறையை நம்பி ஆட்சியிழந்தவர்களுக்கு உண்மை புரியும்.


panneer selvam
அக் 22, 2025 16:48

Total Muslim population in Tamilnadu is 5.20% while Christians population is 5.90 . In General Muslims always united against BJP since they are afraid of Hindu unity while Christians are divided on voting . Example North East states , majority of Christians have voted for BJP


Easwar Kamal
அக் 22, 2025 16:44

எப்படி கூட்டணி வைத்தாலும் இந்த முறை dmk மீண்டும் வருவது கடினமே. பீகார் எலெக்ஷன் முடிந்தவுடன் அமித்ஷா முழு பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பும். இப்போது யார் கூட்டணி வந்தால் யாருகு லாபம் என்பது எல்லாம் கணக்கு போட்டு வைத்து இருப்பர். அதற்கு மேல் எலேச்டின் கமிஷன் பிஜேபி கையில் dmk ஜெயித்தாலும் தோல்வியாகத்தான் உருவாக்கபடும். அதுதான் தமிழகத்துக்கு நல்லது. இந்த dmk தொடர்ந்தால் தமிழ் நாட்டுகும் தமிழர்களுக்கும் நலலது அல்ல.


Thiagaraja boopathi.s
அக் 22, 2025 16:36

ஏமாற்று வேலை


Thiagaraja boopathi.s
அக் 22, 2025 15:24

திமுக வின் ஏமாற்று வேலை


கழுகுப் பார்வை
அக் 22, 2025 15:08

இது சாமான்ய மக்களுக்கே தெரிந்த விஷயம்.. இது உளவுதுறை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அளித்தது வேறு ரகசியம் செய்தி ஆகா இருக்கலாம்.


R.Madhuri Devi 18RBCO024
அக் 22, 2025 15:04

மக்கள் வரிபணத்தில் உளவுத்துறை செய்ற வெலையா இது.