வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நல்ல முயற்சி
கோவில்களை முடக்குவதுதான் நல்லது
அன்னதானம் மட்டும் செய்க அருச்சனை அபிஷேகம் வேண்டாம். குருக்களுக்கு மந்திரம் அபிசேகம் செய்ய தெரியாது தட்டில் போட வேண்டும்.உண்டியல் போடவேண்டாம்
இந்து கோவில்களில் மட்டும் எதற்காக முன்பதிவும் கட்டண தரிசனமும்.? மசூதி சர்ச்சுகள் போல் திறந்து விடுங்கள். நினைத்த போது நினைத்த தினத்தில் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு உரிமையுண்டு.
Before COVID, several times, I booked dharshan tickets and room bookings through online for Palani temples, which was abolished later. If it is reintroduced, it would be helpful for senior citizens. Black marketing people would run away.
நான் செய்யும் இந்த பதிவினை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்களோ எனக்கு தெரியாது ஆனால் என்னுடைய இந்த 54 வயது அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்ட உண்மை என்னவென்றால் கோவில்களில் அர்ச்சனை முறை தான் அத்தனை ஊழல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது ஆகையால் அர்ச்சனை செய்ய விருப்பம் உடையவர்கள் அதற்கான பிரத்தியேகமான உண்டியலில் அவர்கள் விரும்பும் பணத்தை இட்டு வைத்தால் அதை கோவில் நிர்வாகம் எடுத்து அபிஷேகம் அர்ச்சனை அலங்காரம் போன்ற இறைப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அதனை டிஜிட்டல் ஸ்கிரீன் கார்டில் நேரடி ஒளிபரப்பு செய்து பிரத்தியேகமான அறைகளை பக்தர்களை அமர வைத்த அவர்களுக்கு தரிசன பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் இதற்கும் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது மேலும் அபிஷேக அலங்கார கால பூஜைகள் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அர்ச்சகர்கள் மூலஸ்தானத்தில் இருக்க தேவை இல்லை பக்தர்களுக்கும் இறைவனுக்கும் இடையே எந்த மீடியேட்டர்களும் தேவையும் இல்லை எல்லாவிதமான தரிசன டிக்கெட் முறைகளை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் ஒவ்வொரு கோவிலிலும் அதற்கான ஆகம விதிகளின்படி பூஜை நேரங்கள் நிர்ணயித்த அந்த நேரத்தில் மட்டுமே பூஜை அபிஷேக அலங்கார காரியக்கிரமங்களை செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் எல்லாம் எந்த விதமான பாகுபாடும் இடையூறும் இல்லாமல் ஃபர்ஸ்ட் இஸ் ஃபர்ஸ்ட் என்ற விதத்தில் பக்தர்களை தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருந்தால் எந்தவிதமான கியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களும் முன்பதிவுகளும் சில பிரத்தியேக கட்டமைப்பு உள்ள கோவில்களை தவிர மற்ற எந்த கோவிலிலும் தேவைப்படாது மிக மிக முக்கியமாக இறைவனுக்கு முன்னால் எல்லோரும் சமம் என்பதனால் வி ஐ பி தரிசனம் வி வி ஐ பி வி வி ஐ பி போன்ற தரிசன முறைகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் அவர்களுக்கெல்லாம் இறைவனை காண வேண்டும் என்ற முழுமையான ஈடுபாடு இருந்தால் அவர்களும் வரிசையிலேயே வரவேண்டும்
தேர்தல் ஆதாயத்துக்காக ஆலயங்களுக்கு வரும் மாற்று மத அரசியல்வாதிகள். நாத்திகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை, பூரண கும்ப மரியாதை செய்தல் போன்ற தவறுகளை எப்போ தடை செய்வீர்கள்? திருமா, ஜவாஹிருல்லா என புகார் பட்டியல் நீள்கிறது.
அரசுக்கு நிர்வகிக்க தெரியவில்லை என்றால் கோவிலை விட்டு அரசு வெளியே வந்து விட வேண்டியதுதான் சரியாக இருக்கும்.. இருப்பதில் மேலும் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒழுங்காக நடந்து ஒண்டிருந்த தரிசன முறையை வியாசர்பாடி காரனின் தலையீட்டால் சொதப்பி மீனாக்ஷி அம்மனை தரிசிக்க தற்போது 2 மணி நேரம் ஆகிறது.. தேவை இல்லாத விஷயம்
எந்த மண்ணாங்கட்டியும் தேவை இல்லை ....வரும் பக்தர்களை தேக்கி நிறுத்தி வைக்காமல் கடவுளை தரிசனம் செய்ய வரிசையாக அனுமதித்தால் எந்த கோயிலிலும் கூட்டம் இருக்காது...
பக்தர்களை அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வைப்பதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது. எனவே எளிதாக வரிசை முறையில் சென்று, விரைவாக தரிசனம் செய்யும் வழிகளை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டுமே தவிர, வழிபாட்டில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது. மேலும் சந்நிதிக்கு முன்பாக பக்தர்களை நிறுத்தி வைத்து, பணத்துக்காக அர்ச்சகர்கள் மாலை மரியாதை செய்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். இதில் பெருமளவு காலதாமதம் ஏற்பட்டு, வரிசை முறையில் வருபவர்களை காத்திருக்க வைக்கிறது.
முன்பதிவோ பின்பதிவோ கடவுள் தரிசனத்திற்கு பக்தரிடம் பணம் பெறக்கூடாது.
மேலும் செய்திகள்
சவதத்தி எல்லம்மா கோவிலில் புரோக்கர்கள் தொல்லை
08-Jun-2026