உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு

கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு

சென்னை: “கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தன்னிச்சையாக நடந்தது,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு, வி.சி., சார்பில் தலா, 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அத்துடன், வி.சி., கட்சி தலைமை அலுவலகத்தில், 41 மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த உயிரிழப்பு தன்னிச்சையாக நடந்த சம்பவம். இதில், த.வெ.க., தரப்பினருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. திட்டமிட்டு செய்தனர் என்று கூற முடியாது. அதேபோல், தி.மு.க.,வும் எந்த துாண்டுதலையும் செய்திருக்க முடியாது. வன்முறை வெறியாட்டம் நடந்து, 41 பேர் பலியாகவில்லை. தற்காத்துக் கொள்ள நடந்த முயற்சியின் விளைவால், ஏறி மிதித்து மூச்சுத் திணறி இறந்திருக்கின்றனர். இதில், உள்நோக்கம் இருக்க வாய்ப்பில்லை என, பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். சதி திட்டம் இருக்கிறதா என்பதை கண்டறிய புலனாய்வு செய்யப்படுகிறது. அதன் விசாரணைக்கு பின்தான், நடந்தவை குறித்து முழுமையாக தெரியவரும். ஆனால், பொத்தம் பொதுவாக பார்த்தால், இது நெரிசல் பலி. இதற்கு, விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்து. அரசின் மீதோ, முதல்வர் மீதோ பழிசுமத்தும் போக்கு ஏற்புடையது இல்லை. தேர்தலுக்கு முன், மதுபான கடைகள் மூட வேண்டும். கரூர் சம்பவத்தில் கூட, ஏராளமான இளைஞர்கள் மது குடித்துவிட்டு வந்திருப்பது புலனாய்வில் தெரிய வருகிறது. இந்த நெரிசலுக்கு, டாஸ்மாக் கடை, போதை பொருட்களும் காரணமாக உள்ளன. இதில், முதல்வர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அம்பேத்காரியம்
அக் 08, 2025 08:08

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சொல்லிட்டார். இவரை சிபிஐ கைது செய்து கடுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்


Ram Thevar, Thampikkottai
அக் 07, 2025 18:49

இந்தாளுக்கு என்ன பிரச்சனை, பைத்தியக்காரன் மாதிரி ஏதாவது சொல்கிறார்...


M Ramachandran
அக் 07, 2025 18:32

இந்த ஆள் ஏதாவது பினாத்திக்கிட்டே இருக்கார்...


cpv s
அக் 07, 2025 17:12

he have some special invention so award must be given


sengalipuram
அக் 07, 2025 16:29

தொல் திருமா , வைகோ போன்றோர் வாயை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் . contract முடிய இன்னும் 7 மாதங்கள் பாக்கி இருக்கு . அது வரை தினம் ஒரு உருட்டு உருட்ட படும் . இப்படிக்கு - வாயை வாடகைக்கு விட்டுவோர் சங்கம் V V V S


Krishnamurthy Venkatesan
அக் 07, 2025 14:21

வீர வணக்கம், குடும்பத்தில் ஒருவருக்கு ஏழை வேலை. .................. இவரால் எப்படி இவ்வளவு சீரியஸாக சிரிக்காமல் பேச முடிகிறது.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 07, 2025 14:18

ஏர்போர்ட் மூர்த்தி சொன்னது சரிதானோ


Madras Madra
அக் 07, 2025 14:17

த வே க க்கு ஒரு குத்து தி மு க க்கு ஒரு குத்து என்ன பொழப்புடா சே


ram
அக் 07, 2025 13:42

இப்போது நீதி அரசர்களுக்கும் குருமாவுக்கும் தான் போட்டி


Rajah
அக் 07, 2025 13:12

இந்த பணம் யாரிடம் இருந்து புடுங்கியது. திரௌபதி படத்தில் வரும் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.


முக்கிய வீடியோ