உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்

உயிருக்கு அச்சுறுத்தல்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் திடுக்கிடும் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நிலைமையின் தீவிரம் தெரியாமல், தவறான முடிவு எடுத்து என் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியாது' என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் புகார் தெரிவித்துள்ளார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjfy1iyy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் ஐகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளியில் கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை.இது பற்றி சிறப்பு அரசு வக்கீலுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை கோர்ட்டில் ஆஜராக வர வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு விட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.'பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது, தவறானது, முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், என் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. எனவே, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கோர்ட்டில் ஆஜராக இயலாத நிலை இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்' என்று சகாயம் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.கடந்த 2014ம் ஆண்டில் அவர், குவாரிகளில் நடந்த சட்ட விரோத செயல்பாடுகள் பற்றி விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரித்த அவர், 1990ம் ஆண்டு முதல் நடந்த குவாரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார்.அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் ஆனது.'பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி புரிந்து கொள்ளவில்லை' என்று கூறியுள்ள சகாயம், சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த ஜெகபர் அலி கொலை, திருநெல்வேலியில் நடந்த ஜாகிர் உசேன் கொலை ஆகியவற்றை சுட்டிக் காட்டியுள்ளார்.

கவலைப்படாத தமிழக அரசு

ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஏஸ்., அதிகாரி சகாயம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: நாட்டின் மிகப்பெரிய ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளேன். அந்த ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். வரலாற்றுச்சின்னங்கள் கூட தகர்க்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட எனக்கு பாதுகாப்பை விலக்கிக்கொண்டுள்ளனர். இது உண்மையிலேயே அபாயகரமான நிலை. இது பற்றி நான் சிறப்பு நீதிமன்றத்தின் அரசு வக்கீலுக்கு கடிதம் எழுதி உள்ளேன். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளேன். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளேன். நான் என் நடவடிக்கை மேற்கொள்ளும்போது நான் அச்சப்படவில்லை. இது போன்ற விளைவுகள் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து தான் சவால்களை சந்தித்தேன். ஊழல்களை வெளிக்கொண்டு வந்தேன். ஆனால், இதையெல்லாம் உணராத ஒரு அரசு, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் பாதுகாப்பை பற்றிக்கூட கவலைப்படாத தமிழக அரசு, எப்படி சாதாரண குடிமகன் பாதுகாப்பை உறுதி செய்யும்? இது பற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் விரிவான 10 பக்க கடிதத்தையும் எழுதி உள்ளேன். இவ்வாறு சகாயம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ramesh Sargam
மே 03, 2025 23:08

இதிலிருந்து என்ன தெரிகிறது? திமுகவுக்கு ஜால்றா போடுகிறவரைக்கும்தான் உனக்கு நல்லது. எதிர்த்தால் உயிருக்கே ஆபத்து. அது IAS, IPS அதிகாரிகளாக இருக்கட்டும், அல்லது ஆர்டினரி ட்ரைவர் சாதிக் பாஷாவாக இருக்கட்டும்.


Venkatesh
மே 03, 2025 08:29

சங்கிஸ் இன் டெலிகேட் பொசிசன் ..சகாயம் ஒரு கிறிஸ்டியன் அதனால எதிர்க்கலாமா? இல்ல திராவிட இயக்கத்துக்கு எதிரா ஆதரிக்கலாமா ஆதரிக்கலாமா ? ரெண்டு ரூவாய்க்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிஇருக்கு ..


Kuru
மே 02, 2025 20:57

இவர் சொல்வதுபோல் பல உயிர்கள் பலிகொடுத்துள்ளோம். இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களும் வெட்கப்பட வேண்டும் வேதனைபடவேண்டும். நாட்டுக்காகவும் பொதுமக்களுக்காகவும் உண்மையை சொன்னதனால் ஒருவன் கொலை செய்யப்பட்டால் அந்த குற்றத்தை செய்தவனுக்கு மரண தண்டனை என்பது கூட சிறிய தண்டனை தான்.


Ramanujam Veraswamy
மே 02, 2025 18:57

This is hand in clove arrangement by the beneficiaries with full understanding of the Govt. Then, who will dare to expose corruption. SC/HCs are to address his letter with all seriousness it warrants.


Padmasridharan
மே 02, 2025 18:39

இவர் செய்கைக்கு பாராட்டுகள். ஆனால் சாதாரண குடிமகனுக்கு பாதுகாப்பு இருக்கிறதென்று நினைத்து பேசி உள்ளார். கண்டிப்பாக இல்லை அய்யா. காவலர்கள் அதை ரோட்டிலும், கடற்கரையிலும் அதட்டி பணமாக்கி கொண்டிருக்கிறார்கள். அதற்கு மேலும், தங்கள் வண்டியில் உட்கார வைத்து அறைக்கும் அழைத்து செல்கிறார்கள். ஒரு காலத்துல உண்மை பேசுபவர்கள் காவல் நிலையத்தை நாடினர் ஆனால் இப்போது பொய்கள் பேசுபவர்களே முதலில் இவர்களை நாடுகின்றனர். அரசதிகாரிகள் செய்யும் அட்டூழியத்திற்கு முன் எந்த படிப்பும், நேர்மையான மனிதரும் நின்று பேசவும் முடிவதில்லை, வாழத் தகுதியில்லாமல் செய்கின்றனர்.


Mecca Shivan
மே 02, 2025 18:22

இதில் அசிங்கம் என்னவென்றால் எஸ் வீ சேகருக்கு பாதுகாப்பு ..மகா கேவலம்


நிக்கோல்தாம்சன்
மே 02, 2025 17:48

திராவிட கட்சிக்காக வோட்டு போடுங்க என்றார்கள் , இப்போ பாதுகாப்பு இல்லை என்கிறார்கள் எது நிஜம் மக்களே


Srinivasan Krishnamoorthy
மே 02, 2025 17:37

This officer is the stooge of christian missionaries. He just comes out of slumber many times for the sake of seeking limelight. Now it is election time. this guy has CM or other aspirations. watch out Vijay who is also backed by christian missionaries


என்றும் இந்தியன்
மே 02, 2025 16:54

இங்கே பாருங்க நடப்பது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதில் ஊழல் குற்றம் செய்தவர்களுக்குத்தான் பாதுகாப்பு கொடுக்கமுடியும் ஊழலுக்கு எதிராக உள்ளவர்களுக்கு ஒரு போதும் பாதுகாப்பு தரமுடியாது


பா மாதவன்
மே 02, 2025 16:32

தமிழக சட்ட ஒழுங்கு பற்றிய தற்போதைய நிலைமை ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரிக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இப்பொழுது தான் உணமையை உரக்க சொல்லக் கூடிய நிலைமை. உயரிய அதிகாரியாக இருந்த அவருக்கே சரியான பாதுகாப்பு இல்லையென உணரும்போது சாதாரண மக்கள் நிலைமை.... மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரவேண்டும்.