வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இத்தனை வருஷம் பான் பீடா சப்புட்டுக்கிட்டிருந்தாரு. வாயை திறக்க முடியலே
இந்திராகாந்தி போல ராஜிவ், ராகுல் சீரியசான அரசியல்வாதிகளல்ல.
ராஜீவே அரசியல் கத்துக்குட்டி. சுற்றிலும் தவறான ஆலோசகர்கள் கூட்டத்தின் பேச்சைக் கேட்டு நிர்வாகம் செய்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய வரலாறே புரியாத JN தீட்சித், KPS மேனன் போன்ற கேரள வெளிவிவகாரத்துறை ஆட்களின் பேச்சைக் கேட்டு அமைதிப் படையை அனுப்பி ஆயிரம் ராணுவ வீரர்களை இழக்கக் காரணமாக இருந்தார். இந்திராவின் வாரிசு எனும் ஒரே காரணத்துக்காக அரசியல் ஞானமே இல்லாத ஒருவரை பிரதமராகத் திணித்த சுயநல காங் தலைவர்களால் நாட்டுக்கு நிகழ்ந்த அவமானங்கள் ஏராளம்.
உண்மைதான் சார். இந்திரா காந்தி காலத்தில் G. பார்த்தசாரதி எனும் தமிழ் வெளியுறவுத் துறை அதிகாரிதான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்திரா காந்திக்கு அட்வைசராக மிகச் சிறப்பாக பணியாற்றினார். அவர் மறைவுக்கு பின்னர் வட இந்திய, கேரள லாபிகள் தமிழ் போராளிகளுக்கு எதிராக இந்தியாவை திருப்பி விட்டனர். இன்று கருத்து சொல்லும் மணிசங்கர் அய்யரும் ஒரு முன்னாள் வெளியுறவு அதிகாரி. அன்றைக்கு ராஜீவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
யாரு கேட்டா காரணம்? எப்போதோ முடிந்தது. ஆமாம் இந்த அய்யா யாரு?
பிரிவினைவாத சிந்தனை கொண்ட தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம் தான் காரணம்.
Iyer statement shows the there is a lack of qualified second line leadership in INC. INC is a typical family run corporate party. It is utter nonsense to blame intelligence agency or army. They are controlled by the rulers and their party functionaries Now a days all the retired political netas are issuing useless statements to show their existence There is no suggestions from them for their parties growth, only doing blame games as if they are perfect leaders.
இலங்கை தமிழர் பிரச்சனை இந்திரா காந்தி காலத்தில் ஒரு விதமாகவும் அவர் மறைவுக்கு பின் ராஜீவ் காலத்தில் வேறு விதமாகவும் அணுகப் பட்டது. இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் அங்குள்ள தமிழ் போராளி குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். ஆனால் நேரடியாக இந்திய ராணுவத்தை இலங்கையில் களத்தில் இறக்க நினைக்கவில்லை. அன்று இருந்த இலங்கை தொடர்பான ஆலோசகர்கள் இந்திராவுக்கு தெளிவான வழிமுறைகளை காட்டினர். பிறகு ராஜீவ் காந்தி காலத்தில் அந்த ஆலோசகர்கள் முற்றிலும் மாற்றப் பட்டனர். அவர்கள் தான் ராஜீவை இலங்கை பிரச்சனையில் தவறாக வழி நடத்தி நேரடியாக இந்தப் பிரச்சனையில் இந்தியாவை கோர்த்து விட்டனர். ராஜீவ், ஜெயவர்தன ஒப்பந்தத்தை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்திய அமைதிப் படை இலங்கை வருவதையும் எதிர்த்தார். இந்தியாவையும் , விடுதலைப் புலிகளையும் ஜெயவர்தன மோத விட்டு விடுவார் என்றார். கடைசியில் இலங்கை ராணுவம் ஓய்வில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளும் மோதிக் கொண்டனர். கடைசியில் அது பெரும் மோதலாக உருவெடுத்து ராஜீவ் காந்தி மரணம் வரை சென்றது. ராஜீவ் காலத்தில் இலங்கை தமிழர் தொடர்பான பிரச்சனை குழப்பமடைய காரணம் அதனை சரியாக அணுகாத அன்றைய அதிகாரிகளும் அதனை கேட்ட ராஜீவும் தான் காரணம். ராணுவமோ உளவுத்துறையோ காரணம் அல்ல.
Rajivs policy correct .It finally resulted in the death of Prabhakaran who famously claimed we and Sinhalese are brothers .we will settle our differences PEACEFULLY when IPKF was in Srilanka.Rajivs policy also wiped out LTTE which indulged in fraternal killing s including peace loving good leaders like Amirthalingam Padhmanabha and some in LTTE itself such as Mathiah