உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜிவின் இலங்கை கொள்கை தோல்விக்கு ராணுவம், உளவுத்துறையே முக்கிய காரணம் மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு

ராஜிவின் இலங்கை கொள்கை தோல்விக்கு ராணுவம், உளவுத்துறையே முக்கிய காரணம் மணிசங்கர் அய்யர் குற்றச்சாட்டு

கவுசாலி : 'முன்னாள் பிரதமர் ராஜிவ் வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு நம் ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்' என, மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடந்தது.

சமூக எல்லை

இதில் பங்கேற்ற மணிசங்கர் அய்யர் பேசியதாவது:

ராஜிவ் தேர்ந்தெடுத்த அரசியல் கொள்கைகளுக்கும், தற்போதுள்ள நிர்வாகத்தின் அரசியல் கொள்கைளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தற்போதைய அரசியல் கொள்கைகள், நம் நாட்டின் புவியியல் மற்றும் சமூக எல்லைகளை புறக்கணிக்கின்றன. இலங்கை சிதறுண்டால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதை ராஜிவ் உணர்ந்திருந்தார். இதனால், இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். இலங்கை சிதறிவிடாமல் இருப்பதை தடுக்கவும், தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலைதுாக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கையை ராஜிவ் எடுத்தார். இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தான்; ஆட்சியை கைப்பற்ற அல்ல. ஆனால், அந்த முடிவு தவறாக மாறியது. முக்கிய தமிழ் தலைவர்கள் மற்றும் போராளி குழுக்களை தவறாக எடை போட்டதால், அனைத்தும் தவறாகி போனது. எது மிக முக்கியம் என ராஜிவ் நினைத்தாரோ, அந்த விஷயமே அவரை அரசியல் ரீதியாக மிகப் பெரிய விலையை கொடுக்க வைத்தது. அதற்கு காரணம் நம் ராணுவமும், உளவுத்துறையும் அவரை கைவிட்டது தான். இவ்வாறு அவர் கூறினார். இலக்கிய திருவிழாவின் போது, 'பாபர் மசூதி இடிப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'டிவி'யில் ராமாயண தொடரை ஒளிபரப்பு செய்தது யார்?' என, மணிசங்கர் அய்யரிடம் கேள்வி கேட்கப்பட்டது. நம் இதிகாசம் அதற்கு அவர், ''நம் பாரம்பரியத்தின் மீது ராஜிவ் மிகுந்த மதிப்பும் பெருமையும் கொண்டிருந்தார். அவர் தான் ராமாயண தொடரை, 'டிவி'யில் ஒளிபரப்ப முக்கிய காரணமாக இருந்தார். ''நம் இதிகாசத்தை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதை செய்தார். மத ரீதியிலான பிரசாரத்துக்காக அவர் அதை செய்யவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
அக் 14, 2025 18:36

இத்தனை வருஷம் பான் பீடா சப்புட்டுக்கிட்டிருந்தாரு. வாயை திறக்க முடியலே


ஆரூர் ரங்
அக் 14, 2025 14:56

இந்திராகாந்தி போல ராஜிவ், ராகுல் சீரியசான அரசியல்வாதிகளல்ல.


ஆரூர் ரங்
அக் 14, 2025 14:46

ராஜீவே அரசியல் கத்துக்குட்டி. சுற்றிலும் தவறான ஆலோசகர்கள் கூட்டத்தின் பேச்சைக் கேட்டு நிர்வாகம் செய்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய வரலாறே புரியாத JN தீட்சித், KPS மேனன் போன்ற கேரள வெளிவிவகாரத்துறை ஆட்களின் பேச்சைக் கேட்டு அமைதிப் படையை அனுப்பி ஆயிரம் ராணுவ வீரர்களை இழக்கக் காரணமாக இருந்தார். இந்திராவின் வாரிசு எனும் ஒரே காரணத்துக்காக அரசியல் ஞானமே இல்லாத ஒருவரை பிரதமராகத் திணித்த சுயநல காங் தலைவர்களால் நாட்டுக்கு நிகழ்ந்த அவமானங்கள் ஏராளம்.


K.Ravi Chandran, Pudukkottai
அக் 14, 2025 16:52

உண்மைதான் சார். இந்திரா காந்தி காலத்தில் G. பார்த்தசாரதி எனும் தமிழ் வெளியுறவுத் துறை அதிகாரிதான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்திரா காந்திக்கு அட்வைசராக மிகச் சிறப்பாக பணியாற்றினார். அவர் மறைவுக்கு பின்னர் வட இந்திய, கேரள லாபிகள் தமிழ் போராளிகளுக்கு எதிராக இந்தியாவை திருப்பி விட்டனர். இன்று கருத்து சொல்லும் மணிசங்கர் அய்யரும் ஒரு முன்னாள் வெளியுறவு அதிகாரி. அன்றைக்கு ராஜீவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.


பிரேம்ஜி
அக் 14, 2025 09:05

யாரு கேட்டா காரணம்? எப்போதோ முடிந்தது. ஆமாம் இந்த அய்யா யாரு?


Kulandai kannan
அக் 14, 2025 08:01

பிரிவினைவாத சிந்தனை கொண்ட தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம் தான் காரணம்.


Subburamu K
அக் 14, 2025 07:58

Iyer statement shows the there is a lack of qualified second line leadership in INC. INC is a typical family run corporate party. It is utter nonsense to blame intelligence agency or army. They are controlled by the rulers and their party functionaries Now a days all the retired political netas are issuing useless statements to show their existence There is no suggestions from them for their parties growth, only doing blame games as if they are perfect leaders.


K.Ravi Chandran, Pudukkottai
அக் 14, 2025 06:19

இலங்கை தமிழர் பிரச்சனை இந்திரா காந்தி காலத்தில் ஒரு விதமாகவும் அவர் மறைவுக்கு பின் ராஜீவ் காலத்தில் வேறு விதமாகவும் அணுகப் பட்டது. இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும் அங்குள்ள தமிழ் போராளி குழுக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். ஆனால் நேரடியாக இந்திய ராணுவத்தை இலங்கையில் களத்தில் இறக்க நினைக்கவில்லை. அன்று இருந்த இலங்கை தொடர்பான ஆலோசகர்கள் இந்திராவுக்கு தெளிவான வழிமுறைகளை காட்டினர். பிறகு ராஜீவ் காந்தி காலத்தில் அந்த ஆலோசகர்கள் முற்றிலும் மாற்றப் பட்டனர். அவர்கள் தான் ராஜீவை இலங்கை பிரச்சனையில் தவறாக வழி நடத்தி நேரடியாக இந்தப் பிரச்சனையில் இந்தியாவை கோர்த்து விட்டனர். ராஜீவ், ஜெயவர்தன ஒப்பந்தத்தை பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார். இந்திய அமைதிப் படை இலங்கை வருவதையும் எதிர்த்தார். இந்தியாவையும் , விடுதலைப் புலிகளையும் ஜெயவர்தன மோத விட்டு விடுவார் என்றார். கடைசியில் இலங்கை ராணுவம் ஓய்வில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளும் மோதிக் கொண்டனர். கடைசியில் அது பெரும் மோதலாக உருவெடுத்து ராஜீவ் காந்தி மரணம் வரை சென்றது. ராஜீவ் காலத்தில் இலங்கை தமிழர் தொடர்பான பிரச்சனை குழப்பமடைய காரணம் அதனை சரியாக அணுகாத அன்றைய அதிகாரிகளும் அதனை கேட்ட ராஜீவும் தான் காரணம். ராணுவமோ உளவுத்துறையோ காரணம் அல்ல.


SANKAR
அக் 14, 2025 10:34

Rajivs policy correct .It finally resulted in the death of Prabhakaran who famously claimed we and Sinhalese are brothers .we will settle our differences PEACEFULLY when IPKF was in Srilanka.Rajivs policy also wiped out LTTE which indulged in fraternal killing s including peace loving good leaders like Amirthalingam Padhmanabha and some in LTTE itself such as Mathiah


புதிய வீடியோ